தவிசாளரின் மீளாய்வு

“கருத்திற் கொள்ளப்படும் காலப்பகுதியில் அவர்களின் கம்பெனியின் செயற்பாடு பற்றி மகிழ்ச்சி அடைவதற்கு எமது பெறுமதி மிக்க பங்குதாரர்கள் அனைத்துக் காரணங்களையும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட பொருளாதாரப் பின்புலத்துக்கு எதிராக போராடிப் பெறப்பட்ட வெற்றியாக அது அமைந்துள்ளது …

சிங்கர் நிதி நிறுவனத்தின் (Singer Finance (Lanka) PLC) 2018/2019 காலப்பகுதிக்கான ஆண்டு அறிக்கை மற்றும் கணக்காய்வுக்கு உட்படுத்த்தப்பட்ட நிதியியல் தகவல்களை உங்கள் முன் கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. கருத்திற் கொள்ளப்படும் காலப்பகுதியில் அவர்களின் கம்பெனியின் செயற்பாடு பற்றி மகிழ்ச்சி அடைவதற்கு எமது பெறுமதி மிக்க பங்குதாரர்கள் அனைத்துக் காரணங்களையும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட பொருளாதாரப் பின்புலத்துக்கு எதிராக போராடிப் பெறப்பட்ட வெற்றியாக அது அமைந்துள்ளது. குறித்த பொருளாதாரப் பின்புலத்தில் ஆண்டின் பிந்திய அரைவாசிக் காலப்பகுதியில் நிச்சயமற்ற நிலை ஒன்றும் காணப்பட்டது. கடன் வழங்குதல் மற்றும் அதனுடன் இணைந்துள்ள அபாய நேரிடரை தூரமாக்கல் என்பவற்றின் இடையே நாம் சரியான சமநிலையை பேண வேண்டிய அவசியம் காணப்பட்டதால் அவ்வாண்டுக்கான பயணம் விசேடமாக சிரமம் மிக்கதாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், சிங்கர் நிதி நிறுவனத்தின் திறன் மிக்க அணி தனக்கு முன்னால் இருந்த பணிக்கு தேவையான அளவை விட திறனைக் கொண்டிருந்ததால் அவர்களால் வெற்றிகரமாக சிறந்த சமநிலையைப் பேண முடிந்ததால் இத்துறையின் சராசரியை விட மிகவும் அதிகமாக சிங்கர் நிதி நிறுவனத்தால் செயற்பட முடிந்தது. துரதிர்ஷடவசமாக, நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சியினால் மேலும் பாரிய வளர்ச்சியை இலகுபடுத்துவதற்கான ஆதரவை வழங்க முடியவில்லை.

பொருளாதார செயற்பாடு

மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் ஆண்டில் உண்மையான பொருளாதாரச் செயற்பாடுகளின் அடிப்படையில் இலங்கையின் முன்னேற்றம் பல காரணங்களினால் எதிர்பார்க்கப்பட்டதற்கும் குறைவானதாகவே அமைந்திருந்தது. பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பாதை முடக்கப்பட்ட நிலையில் அது பல துறைகளில் பின் விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. 2017 ஆம் ஆண்டு 3.4 சதவீதமாக அமைந்திருந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 2018 ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருந்தது. விவசாயத்துறை முந்தைய ஆண்டில் எதிர்நோக்கிய தீவிர காலநிலைப் பிரச்சினைகளில் இருந்து மீட்சி அடைந்து குறித்த ஆண்டில் எட்டப்பட்ட 4.1% வளர்ச்சியை விட 0.9% என்ற ஓரளவு வளர்ச்சியை அடைந்து கருத்திற் கொள்ளப்படும் ஆண்டில் 4.8% என்ற வளர்ச்சியை காண்பித்தது. சேவைகள் துறையின் வளர்ச்சியில் நிதிதியியல் சேவைகள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 4.7 சதவீதமாகக் காணப்பட்ட இத்துறையின் வளர்ச்சி முந்தைய ஆண்டில் எட்டப்பட்ட 3.6 சதவீத வளர்ச்சியை விட அதிகமாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீடுகளை மேற்கொள்வோரின் மனநிலை மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்ததால் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் (CSE) தாழ்ந்த செயற்பாட்டு மட்டம் கொண்ட இன்னொரு வருடத்தை தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் ஏற்பட்ட தீங்கான விடயங்கள் காரணமாகப் பதிவு செய்தது.

 

நிதியியல் துறையின் செயற்பாடு

ஒட்டு மொத்த நிதியியல் துறையும் 2018 ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த போதும், அனுமதிப்பத்திரம் பெற்ற நிதிக் கம்பெனிகள் (LFCs) மற்றும் விசேட லீசிங் கம்பெனிகள் (LFCs) என்பவற்றின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டு கடன் வளர்ச்சி மற்றும் இலாபமீட்டும் திறன் என்பன குறைவடைந்து மந்த நிலையிலேயே காணப்பட்டது. இத்துறையின் கடன் வழங்கும் நடவடிக்கைகள் பேரண்ட கட்டுப்பாட்டு (macroprudential) மற்றும் பிஸ்கால் கொள்கை நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்டது. குறித்த கொள்கை நடவடிக்கைகள் மோட்டார் வாகனங்களின் இறக்குமதி மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான கடன் வசதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டன. அதிகரித்த நிதியிடல் செலவுகள் மற்றும் செயற்படாத கடன்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கடன் இழப்பு ஏற்பாடுகள் காரணமாக இத்துறையின் இலாபமீட்டும் திறன் பிரதானமாக குறித்த ஆண்டில் குறைவடைந்து. குறித்த ஆண்டில் துறையின் இலாபமீட்டும் திறன் நோக்கிய அழுத்தத்தின் அறிகுறிகள் சொத்துக்களின் மீதான வருமானம் (ROA) மற்றும் விகிதப் பங்குகளின் மீதான வருமானம் (ROE) என்பவற்றில் காணப்பட்ட வீழ்ச்சியில் பிரதிபலித்தது. மிகவும் தேவையான தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கையாக, இலங்கை மத்திய வங்கி LFCs மற்றும் SLCs என்பவற்றின் மீதான மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டு சட்டக வடிவமைப்பை வலுப்படுத்தியதுடன் இத்துறை மீது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நலிவான LFCs களை சீர்திருத்த அல்லது மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது.

“நடுத்தர அளவுடைய, நன்கு இயங்கும் நிதிக் கம்பெனி ஒன்றுக்கு அதிக கிளைகளை உருவாக்குதல் சிறந்த வளர்ச்சி மூலோபாயமாக அமையும். இந்த ஆண்டில் 4 புதிய கிளைகள் திறக்கப்பட்டதுடன் 3 சேவை நிலையங்கள் இடம் மாற்றப்பட்டன.”

 

கம்பெனியின் செயற்பாடு

மீளாய்வு மேற்கொள்ளப்படும் ஆண்டில் பல நிதியியல் நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்கிய போதும் கம்பெனி 22% வளர்ச்சியைக் காண்பித்துள்ளமை சிறந்த அடைவாகக் கருதப்படலாம். ஒட்டுமொத்தமாக, கம்பெனியின் செயற்பாடுகள் தொடர்பில் நான் திருப்தியடைவதுடன் இச்சயற்பாட்டுக்கான பாராட்டுக்கள் பணிப்பாளர் சபை வழங்கிய சிறப்பான அறிவுரைகள் மற்றும் அம்மூலோபாயங்களை வினைத்திறனுடன் செயற்படுத்திய பிரதம நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் கம்பெனியின் பணியாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களாகும். 2018/19 காலப்பகுதி பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த நிதியியல் துறைக்கும் அழுத்தமான காலப்பகுதியாக அமையவுள்ளமைக்கு ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், பணியாளர்கள் தமது கடன் வழங்கல் செயற்பாடுகளில் கவனத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். அதே நேரத்தில், லீசிங் எமது அடிப்படை வியாபாரமாக அமைவதால் தனது அடிப்படைத் துறையில் கம்பெனி உச்ச வளர்ச்சியை அடைவதும் முக்கியமானதாகும். இருந்த போதும், நாம் வருடத்தின் எஞ்சிய பகுதிக்கு கட்டுப்பாடு மிக்க பாதையை தெரிவு செய்துள்ளதுடன் எமது வாடிக்கையாளர்களின் ஈட்டுக் கடன்கள், நுகர்வுப் பொருட்கள் மற்றும் கடன் அட்டைகள் போன்றவற்றில் தடுப்புகளை ஏற்படுத்த எண்ணியுள்ளோம். இது கம்பெனியின் உயர் வளர்ச்சி வீதங்களை பாதிக்கும் என்ற யதார்த்தத்தை நாம் அறிந்துள்ள போதும் அது நிச்சயமாக சிறந்த அடிப்படைகளை உறுதி செய்யும். மதிப்பீடு செய்யப்படும் ஆண்டில், கம்பெனி தனது பொருட்களின் வரிசையை அதிக கிளைகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட தங்கக் கடன் 14 கிளைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காலவோட்டத்தில் அனைத்து சிங்கர் பினான்ஸ் கிளைகளுக்கும் இந்த தங்கக் கடன்கள் விரிவுபடுத்தப்படவுள்ளன. இது காலவரை கம்பெனியின் விரிவாக்கம் கட்டுப்பாடு மிக்கதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கிளையும் முதல் முதலீடுகள் மற்றும் மனித வளச் செலவுகளை உகந்ததாக ஆக்கும் வகையில் சரி நிகர் நிலையை அடைவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றன. நடுத்தர அளவில் அமைந்த மிகவும் நன்றாக நடத்திச் செல்லப்படுகின்ற நிதிக் கம்பெனி ஒன்றாக, அதிக கிளைகளை திறப்பது சரியான வளர்ச்சி மூலோபாயமாக அமையும். இந்த ஆண்டில் 4 புதிய கிளைகள் திறக்கப்பட்டதுடன் 3 சேவை நிலையங்கள் அதிக முக்கியத்துவம் மிக்க இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், சில சிங்கர் பினான்ஸ் கிளைகள், சிங்கர் விற்பனை நிலையங்களில் இயங்கி வந்ததுடன் அவை அதிகமான புறக்கணிக்கப்பட்ட இடங்களாக அமைந்திருந்தன. அத்துடன் அவற்றை காட்சியறைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மாத்திரமே அணுகும் நிலை காணப்பட்டது. தற்பொழுது அவை தனியான கிளைகளாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், சிங்கர் பினான்ஸ் தனித்துவ அடையாளம் கொண்டதாக காணப்படுவதுடன் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் நிறைவேற்றும் நிலையில் உள்ளது. இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் இலக்கம் 498, R.A. டீ மெல் மாவத்தை, கொழும்பு – 03 என்ற முகவரியில் அமைந்துள்ள புதிய இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள தலைமை அலுவலகம் குழும வியாபார நாமம் ஒன்றின் பாரிய வெளித்தெரியும் தன்மையை பெற்றுக் கொண்டது. எதிர் வரும் காலங்களில் சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தின் நிலைப்படுத்தலை வியாபார நாமம் மற்றும் இடங்கள் தொடர்பில் வலுப்படுத்துவதற்கான இயங்கு நிலை கொண்ட மூலோபாயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. தங்கக் கடன்களை ஆரம்பித்தல் மற்றும் கிளைகளை மீள்கட்டமைத்தல் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் காரணமாக இவ்வருடத்தில் எமது இலாபமீட்டும் திறன் சிறிதளவு குறைந்துள்ளது, எவ்வாறாயினும், எதிர்வரும் மாதங்களில் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது எம்மால் இம்முதலீடுகளின் மீது பாரிய வருமானங்களைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம். கடன் அட்டைகள் நாம் சில தகவிணக்க பிரச்சினைகளை எதிர்நோக்கியமையினால் எதிர்வு கூறப்பட முடியமான எதிர்காலம் வரை அதன் வியாபார அளவினைக் குறைக்க எண்ணியுள்ளோம்.

 

எதிர்காலத்தை நோக்கியதாக

இந்த வருடத்தில் எமது கவனம் கம்பெனியின் வளங்களை உகந்த அளவிற்கு மாற்றுவதில் செலுத்தப்பட்டிருந்தது. சுற்றுலா மற்றும் கட்டுமானம் ஆகிய இரு பிரதான துறைகளும் எமது எதிர்பார்ப்பு மிக்க துறைகளாக இருந்த போதும், அவ்விரு துறைகளும் இவ்வருடத்தில் வேகக் குறைவை எதிர்கொண்டதுடன் 2019 ஆம் ஆண்டு உயர் வேகத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது, எனினும் எதிர்வரும் நிதியாண்டின் முதல் அரைவாசிப் பகுதி சவால் மிக்கதாகவே அமையும். மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் வருடத்தில் உறுதியான செயற்பாட்டைக் கொண்டாடும் அதேவேளை நலிவு மிக்க விடயங்கள் வலுப்படத்தப்பட வேண்டும் என்பதையும் கம்பெனி அறிந்துள்ளது. உதாரணமாக, வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதில் சிறந்த திட்டமிடல் மற்றும் நேர்மறையான நிலைப்பாடு அவசியமாக அமைகின்றது. எதிர்கால வளர்ச்சிக்கான தடைகள் கடந்த வருடம் அமைந்திருந்த அதே தடைகளாகவே காணப்படுகின்றன. அவையாவன; வாகன இறக்குமதியில் காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் லீசிங் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் தடைகள் மற்றும் வரிகள் என்பனவாகும். இத்தடையினை சமாளிப்பதற்கு லீசிங் செயற்பாட்டில் பெரிய நுழைவுச்சீட்டு அளவுகளை கொள்வனவு செய்வதற்கு கம்பெனி திட்டமிட்டுள்ளது. NPL கள் எமது துறையின் இணைநிலை நிறுவனங்களை மிகவும் குறைவானவையாக அமைந்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒட்டுமொத்தமாக, பொருளாதார மந்த நிலை சிங்கர் நிதி நிறுவனத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. கட்டுப்பாடு மிக்க முகாமைத்துவம் மற்றும் கம்பெனி பழைய வாகனங்களின் சந்தையில் செலுத்தியமை என்பன இதற்குரிய காரணங்களாக அமைகின்றன.

கம்பெனி தனது நிலையான வைப்புகள், தங்கக் கடன்கள் மற்றும் உறுதியாக வளர்ச்சியடையும் வியாபாரங்களில் கவனம் செலுத்துதல் என்பவற்றின் மூலம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது செல்வமாகக் காணப்படும் திறமை மற்றும் அனுபவம் என்பவற்றின் மூலம் சிங்கர் நிதி நிறுவனம் அதிக சந்தைப் பங்கைப் பெறுவதற்காக இயங்குநிலை கொண்ட எதிர்கால வளர்ச்சி மூலோபாயத்தை உருவாக்கியுள்ளோம். மீளாய்வு செய்யப்படும் வருடத்தில் தங்கக் கடன் திட்டத்தை முன் கொண்டு செல்வதற்கு புதிய ஆளணி ஒன்று பணிக்கு அமர்த்தப்பட்டதுடன் அவர்கள் கம்பெனியின் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இயக்க நிபுணத்துவத்தை அடையும் வகையில் ஆளணியினை பயிற்றுவிப்பதில் முதலீடுகளை மேற்கொள்வதில் கம்பெனி கடப்பாடு மிக்கதாகக் காணப்படுகின்றது. சிங்கர் பினான்ஸ் நிறுவனம் தற்பொழுது இரண்டு பங்காளர்களைக் கொண்டுள்ளது, சிங்கர் (ஸ்ரீ லங்கா) மற்றும் ஹேலீஸ் PLC என்பனவே அவையாகும். முக்கியத்துவம் மிக்க இந்த இரண்டு குழுக்களும் இலங்கையின் குழுமத் துறையின் உச்சத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளனவாகும். இயற்கையாக, மேலெழும் வாய்ப்புகளின் நன்மையை பெற்றுக்கொள்வதற்கு எமது ஒன்றிணைந்த சக்தியை தொடர்ச்சியாக பயன்படுத்தவுள்ளோம். குழுமங்களின் ஒன்றிணைந்த சக்தியைப் பயன்படுத்தும் வேளை, சிங்கர் நிதி நிறுவனம் சுயாதீனமாக தனது தனித்துவம் மிக்க அடையாளத்தை உருவாக்குவதற்காக மற்றும் விரிவாக்குவதற்காக வாய்ப்புகளை தேடும். கம்பெனியானது தனது வாடிக்கையாளர்களுக்கு மற்றும் வைப்பீட்டாளர்களை வளப்படுத்திடும் நிதியியல் தீர்வுகளை வழங்கும் பொறுப்பு மிக்க நிதியியல் நிறுவனமாக தனது நிலையை ஸ்திரப்படுத்தவும் விகிதப் பங்காளர்களுக்கு போதிய வருமானம் வழங்கும் அபிலாசைகளை கொண்டுள்ளது. இரண்டு பெற்றோர் நிறுவனங்களாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி வழிகாட்டல்களுக்கு அமைய சிங்கர் நிதி நிறுவனம் உயர் குழும ஆட்சி நியமங்களைப் பேணி வருகின்றது.

 

ஏற்புரை

எனது மீளாய்வில் கம்பெனியின் செயற்பாட்டை விபரமாகக் குறிப்பிட்ட பின்னர் சபையில் எனது சக உறுப்பினர்கள் எனக்கு வழங்கும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது மீதமாகவுள்ளது. சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. R. S . விஜேவீர அவர்கள் இந்நிறுவனம் ஆரம்பித்த காலம் தொடக்கம் 14 வருடங்கள் சேவை புரிந்துள்ளார். அவருக்கு எனது ஆழ்ந்த பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் அவரின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. அசோக பீரிஸ் அவர்களுக்கு குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் வழங்கிய பங்களிப்புக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகின்றேன். சவால் மிக்க சூழ்நிலைகளில் வளர்ச்சிக்கு தலைமைத்துவம் வழங்கியதன் மூலம் கம்பெனியின் வெற்றியில் பங்களிப்பதில் தமது விருப்பை வெளிப்படுத்திய பிரதம நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் ஆளணி பாராட்டுக்குரியது. கம்பெனியின் பங்காளர்கள் வழங்கும் தடையற்ற ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். அத்துடன், புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகிய எமது வழங்கப்பட்ட உறுதி மொழிகளை காக்கும் எமது இயலுமையில் நம்பிக்கை கொண்ட கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அரவிந்த பெரேரா
தவிசாளர் – சிங்கர் பினான்ஸ் (லங்கா) PLC

குழும பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு

“சிங்கர் ஃபைனான்ஸ் ஒரு சவாலான பொருளாதார பின்னணியில் நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறனைப் பொறுத்தவரை வருடாந்த ரீதியில் (YoY) சிறந்த செயற்பாட்டு மட்டத்தை பதிவு செய்துள்ளது. “

மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டில் மொத்த வருவாய் மற்றும் நிகர லாபம் ஆகியவற்றில் உங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மொத்த வருவாயில் 26% வளர்ச்சியும், நிகர லாபத்தில் 22% வளர்ச்சியும் ஒரு சவாலான மற்றும் அதிக போட்டி நிறைந்த சந்தையில் சராசரி வளர்ச்சி எண்களை விட அதிகமாக உள்ளன. வாகன இறக்குமதியில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் காரணமாக ஒட்டு மொத்தத் துறையும் சந்தையில் கடன் வளர்ச்சியில் குறைவு ஏற்பட்டது.

 

மூலோபாயம் மற்றும் செயற்பாடு

சிங்கர் ஃபைனான்ஸ் ஒரு சவாலான பொருளாதார பின்னணியில் நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறனைப் பொறுத்தவரை வருடாந்த ரீதியில் (YoY) சிறந்த செயற்பாட்டு மட்டத்தை பதிவு செய்துள்ளது. மொத்த வருவாய் 26% வளர்ச்சியடைந்து ரூ. 3.8 பில்லியனை எட்டியதுடன் நிகர லாபம் 22% வளர்ச்சியுற்று ரூ. 540 மில்லியனை எட்டியது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடன் மீளச் செலுத்தல் வரிக்காக ரூ. 48 மில்லியன்கள் மற்றும் SFLRS-9 இன் கீழ் கடன்களின் குறைபாடுகளுக்காக ரூ. 35 மில்லியன்கள் மேலதிகமாக கணக்கீட்டுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும் கம்பெனியின் இலாபமீட்டும் திறன் அதிகரித்துள்ளமை குறிப்பிடப்படுவது பொருத்தமானதாகும். மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் 24% அதிகரித்து ரூ. 17.8 பில்லியனை எட்டியது, வைப்பு 13.8% அதிகரித்து ரூ. 6 பில்லியனை எட்டியது, மற்றும் நிகர வட்டி அளவு 26% அதிகரித்து ரூ. 2.1 பில்லியனை எட்டியது. எங்கள் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், சிங்கர் ஃபைனான்ஸ் 14.08% மூலதன போதுமான விகிதத்தை பராமரித்துள்ளது.

இந்த ஆண்டில் நிறுவனம் 4 புதிய கிளைகள் மற்றும் 3 சேவை நிலையங்களை ஆரம்பித்தமை மற்றும் ஒரு கிளையினை இடவசதி மிக்க மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வசதி மிக்க இடத்துக்கு மாற்றியதன் ஊடாக இயங்குநிலை மிக்க புவியியல் விரிவாக்க மூலோபாயத்தை முன்னெடுத்தது. கடந்த வருடம் திறக்கப்பட்ட இப்புதிய 8 இடங்களிலும் புதுப்பிக்கப்பட்ட வளர்ச்சி எண்கள் எமக்கு ஏற்கனவே அறிக்கையிடப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் சிங்கர் ஸ்ரீ லங்கா வளாகத்தில் அமைந்திருந்த சிங்கர் ஃபைனான்ஸ் தலைமை அலுவலகம் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டது. இது நிறுவனத்தின் வெளித்தெரியும் தன்மையை அதிகரித்ததுடன் சுயாதீனமான ஃபைனான்ஸ் நிறுவனமாக பலமான வர்த்தக அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

மிகக் குறுகிய காலத்துக்குள் சிங்கர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 14 இடங்களில் தங்கக் கடன் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவற்றுள் பெரும்பாலான இடங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இயங்கி வருகின்றன. தங்கக் கடன் செயலாக்கத்தை உருவாக்குவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் மனித வளம் என்பவற்றில் தனித்துவம் மிக்க முதலீடுகளை ஏற்படுத்துவது அவசியமாகும். வளர்ச்சி எண்களில் சில இயக்க மற்றும் நிருவாகச் செலவுகளில் வெளித்தெரிவதுடன் அவை தங்கக் கடன்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுடன் தொடர்பு மிக்கனவாக உள்ளன, எனினும் எதிர்வரும் வருடங்களில் இம்முதலீடுகளின் நன்மைகளை பெற முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளோம்.

சிங்கர் ஃபைனான்ஸ் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக செயற்படாத முற் கொடுப்பனவுகளின் விகிதத்தை தொடர்ச்சியாக இத்துறையின் நியம அளவுகளுக்கும் கீழாகப் பேணி வருகின்றது. இது மீளப்பெறுதல் முகாமைத்துவத்தில் கம்பெனி கொண்டுள்ள பலம் மற்றும் கடன்களை வழங்கும் போது பின்பற்றப்படும் கவனம் அத்துடன் கடன் வழங்கும் தொடர் செயன்முறையின் வினைத்திறன் என்பவற்றைக் காண்பிக்கின்றது. மீளாய்வு செய்யப்படும் ஆண்டில் செயற்படா முற்கொடுப்பனவுகளின் விகிதம் 3.10% ஆகக் காணப்படுகின்றது, இது நிதித்துறையின் சராசரிப் பெறுமதியிலும் கீழானதாகும். இது கடுமையான தீய கடன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பாரம்பரியமான கடனை இரத்து செய்யும் எண்ணிக்கைகளின் பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபை ரூ 1.10 இனை பாங்கொன்றிற்கான பாங்கிலாபமாக அனுமதித்துள்ளனர். இது 41% செலவின விகிதமாகக் காணப்படுவதுடன் கடந்த வருட பாங்கிலாபத்துடன் ஒப்பிடும் வேலை பங்கொன்றின் மீதான 13.4% வளர்ச்சியைக் காண்பிக்கின்றது.

 

சிங்கர் குழுவின் ஒத்துழைப்புகள்

லீசிங் வியாபாரத்தில் பிரதான செயற்பாட்டாளராக முன்னேறியுள்ள சிங்கர் ஃபைனான்ஸ் வருமானத்தில் 80% லீசிங், தங்கக் கடன்கள் மற்றும் ஏனைய கடன் வகைகளில் இருந்தே பெறப்படுகின்றது. இருப்பினும், சிங்கர் மெகாவுக்கு நிதியளித்தல், சிங்கர் இலங்கையின் கிளை நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்ட பெரிய குழு விற்பனைக்கு நிதியளித்தல் மற்றும் குழுவின் சப்ளையர்களின் விலைப்பட்டியல் காரணியாக்கல் போன்ற சில ஒருங்கிணைந்த நிதி வாய்ப்புகளில் சிங்கர் நிதி ஒத்துழைக்கிறது. இந்த வணிக வாய்ப்புகள் சிங்கர் ஃபைனான்ஸுக்கு அதிக மகசூல், குறைந்த இடர் நிதி வாய்ப்புகளை வழங்குகின்றன மற்றும் அமைப்பு மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்குகின்றன.

சிங்கர் குழு ஹேலீஸ் பி.எல்.சியின் ஒரு பகுதியாக இருப்பதால், எங்கள் மூலோபாய திசை இதுவரை ஒரு சுயாதீனமான மற்றும் வலுவான நிதி நிறுவனமாக ஒரு வலுவான நிறுவன நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது. வணிகத்தை அதன் உண்மையான திறனை அடைவதற்கான எங்கள் நோக்கத்தைத் தொடர இது உதவுவும். சிங்கர் ஸ்ரீ லங்கா மற்றும் குழு என்பன இந்த மூலோபாயத்தை அடைவதில் உறுதியாக உள்ளன, அதற்கான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கவுள்ளன. இந்த குழு அடுத்த ஆண்டுகளில் பலத்தின் ஆதாரமாக தொடரும். மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், சிங்கர் ஃபைனான்ஸ் கடன் மூலதனத்தை சுயாதீனமாக உயர்த்துவதிலும், நிலையான வைப்புகளை ஆக்கிரமிப்பாக திரட்டுவதிலும் உறுதியான முன்னேற்றத்தை அடைந்தது.

 

எங்கள் மக்கள் முன்மொழிவு

ஒரு சேவை அமைப்பாக நாங்கள் எங்கள் மக்களை விருத்தி செய்ய கணிசமான முக்கியத்துவம் அளிக்கிறோம் – அவர்களே எமது மிகவும் பெறுமதி மிக்க சொத்தாக அமைந்துள்ளனர். நாங்கள் வழங்கும் சேவையின் தரம் உண்மையிலேயே ஊழியர்களின் தரத்தின் பிரதிநிதி என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வருடத்தில், நிறுவனத்திற்குள் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய குழு கலாச்சாரத்தை உருவாக்க திறனை வளர்ப்பது, இயலுமைகளை விருத்தி செய்வது மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம்

 

வாடிக்கையாளர் தொடர்பு முகாமைத்துவம்

சிங்கர் ஸ்ரீ லங்கா தொடர்ச்சியாக 13 வது ஆண்டாக ஆண்டின் சிறந்த மக்கள் வர்த்தக நாமம் என்ற விருதை வென்றது, இது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை தரங்களுக்கான அதன் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும். குழுவின் புதிய மூலோபாய உத்தரவுகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவத்தில் இன்னும் அதிகமான KPI களை அடைய குழு தீர்மானித்துள்ளது. சிங்கர் ஃபைனான்ஸ், குழுவின் முக்கிய துணை நிறுவனமாக இருப்பதால், வாடிக்கையாளர் மையப்படுத்தலுக்கும் அதே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, இதனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சமூகத்திற்கும் எங்கள் கூட்டுப் பொறுப்பு குறித்த குழு அளவிலான விழிப்புணர்வை உறுதி செய்கிறது.

 

முன்னோக்கிய பாதை

அடுத்த ஆண்டிற்கான குழுவின் மூலோபாய மைய புள்ளிகளில் ஒன்றாக திறனற்ற செலவுகளை முக்கியத்துவம் மிக்க இடங்களில் இருந்து அகற்றுவதில் பணியாற்றுவது காணப்படுகின்றது. இது சிறந்த வருமானத்தை ஈட்டக்கூடிய செயல்பாடுகள் மற்றும் இயக்கங்களில் இந்த சேமிப்புகளை முதலீடு செய்ய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இயக்க நிலப்பரப்பின் விரைவான முன்னேற்றங்களை நாங்கள் அறிவோம், இது இந்த சந்தை மேம்பாடுகளுக்கு எங்கள் பெறுமதி முன்மொழிவை முன் யோசனை மூலமாக மாற்றியமைக்க தூண்டுகிறது. இந்த விரைவான முன்னேற்றங்களைத் தொடர தொழில்நுட்பம் ஒரு முக்கிய உதவியாளராக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் சேவை அளவுருக்களை மேம்படுத்த ஆன்லைன் கடன் மதிப்பீடுகள், டிஜிட்டல்மயமாக்கல் செயல்பாடுகளை அறிமுகப்படுத்த நம்புகிறோம். மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் சமூக ஊடகங்களில் எங்கள் இருப்பை மேம்படுத்தியுள்ளோம், இதன் மூலம் டிஜிட்டல் முறைமைகள் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர் பிரிவுகளுடன் தீவிரமாக ஈடுபடுகிறோம்.

எங்கள் கிளை வலையமைப்பின் மூலோபாய விரிவாக்கத்தின் மூலம் சிங்கர் ஃபைனான்ஸ் அதன் புவியியல் தடம் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இயக்குநர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது, இதன் மூலம் எங்கள் தங்கக் கடன் இலாகாவை விரிவுபடுத்த முடியும்.

 

பாராட்டுக்கள்

சிங்கர் ஃபைனான்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவத்தின் தலைமையில் அணியினர் வழங்கிய பங்களிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன். அவர்களின் கடப்பாடு மற்றும் பங்களிப்பு என்பவற்றின் மூலமே எம்மால் சிறந்த நிதியியல் மற்றும் இயக்க செயற்பாடுகளை அறிக்கையிட முடிந்துள்ளது.

தவிசாளர் திரு. அரவிந்த பெரேரா மற்றும் பணிப்பாளர் சபைக்கு அவர்கள் வழங்கிய மூலோபாயப் பங்களிப்புகள் மற்றும் களைப்பற்ற முயற்சிகளுக்காக விசேட நன்றிகள் உரித்தாகின்றன. குழுவின் தவிசாளர் திரு. மோகன் பண்டிதகே மற்றும் குழுவின் இணைத் தவிசாளர் திரு. தம்மிக பெரேரா ஆகியோர் கம்பெனியின் நீண்ட கால மூலோபாயம் தொடர்பில் வழங்கிய வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

15 வருடங்கள் என்ற முக்கியத்துவம் மிக்க மைல்கல்லை கம்பெனி பூர்த்தி செய்யும் நிலையில் கம்பெனியின் ஓய்வு பெற்ற பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. R.S. விஜேவீர அவர்கள் கம்பெனி தொடங்கிய நாள்முதல் வழங்கிய 14 வருட கால களைப்பற்ற சேவைக்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன் கம்பெனியின் பணிப்பாளர் / குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடாமியற்றிய திரு. அசோக பீரிஸ் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது வாடிக்கையாளர்கள், வழங்குனர்கள் மற்றும் வியாபாரப் பங்காளர்கள் உள்ளடங்கலாக எமது பங்குதாரர்கள் அனைவரும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை இங்கு நான் பதிவு செய்கின்றேன். மத்திய வங்கியின் ஆளுநர், மத்திய வங்கியின் வங்கியற்ற நிறுவனங்களின் மேற்பார்வை பணிப்பாளர் மற்றும் அவரது அதிகாரிகள், பரிமாற்றங்களின் கட்டுப்பாட்டாளர் அத்துடன் கடன் தகவல் பணிமனையின் பொது முகாமையாளர் மற்றும் ஆளணி ஆகியோர் வழங்கிய வழிகாட்டல் மற்றும் ஆதரவு என்பவற்றுக்காக அவர்களுக்கு எமது நன்றியை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

 

மகேஷ் விஜேசுந்தர
பிரதம நிறைவேற்று அதிகாரி

சிங்கர் ஃபைனான்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு

“வரிகளுக்கு பின் கம்பெனியின் நிகர இலாபம் 22% இனால், 542 மில்லியன் ரூபாய்கள் வரை வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.”

பிரதம நிறைவேற்று அதிகாரியாக எனது முதல் ஆண்டில் உங்கள் நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் எதிர்கால பார்வை குறித்த எனது உணர்வுகளை நான் வெளிப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சியையும் கௌரவத்தையும் வழங்குகின்றது. சந்தையில் நிதி தீர்வுகளை வழங்கிய 15 வெற்றிகரமான ஆண்டுகளை நிறுவனம் கொண்டாடுவதால் 2019 ஒரு மைல்கல் ஆண்டாகும். சிங்கர் ஃபைனான்ஸ் சீராகவும், வலிமையாகவும் வளர்ந்துள்ளது, இன்று தொழில்துறையில் அங்கீகரிக்கப்பட்ட இயங்குநராக உள்ள எமது நிறுவனத்தின் மொத்த சொத்து அடிப்படை கிட்டத்தட்ட ரூ. 20 பில்லியன்களாக உள்ளது. நெறிமுறை வணிக மதிப்புகள் மற்றும் கார்ப்பரேட் கவர்னன்ஸ் நடைமுறைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் சமரசமற்ற அர்ப்பணிப்பின் மூலம், நாங்கள் மிகவும் மதிப்பிற்குரிய நிதி நிறுவனமாக தொழிற் துறையில் எங்கள் தொழில் மீதான நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் பெற்றுள்ளோம்.

பொருளாதார மற்றும் தொழில்துறை மீதான மீளாய்வு

இலங்கையின் பொருளாதாரம் 2018 ஆம் ஆண்டு எதிர்வு கூறப்பட்டதையும் விட மந்தமான 3.2 சதவீதம் என்ற பொருளாதார வளர்ச்சியைக் காண்பித்தது. விவசாய நடவடிக்கைகளில் ஒரு மீட்சி காணப்பட்டாலும், தொழில்துறை துறையில் ஒரு சுருக்கம் முதன்மையாக கட்டுமான நடவடிக்கைகளின் வீழ்ச்சியிலிருந்து உருவானது வளர்ச்சி மந்தநிலை அடைவதற்கு வழிவகுத்தது.

மதிப்பு விகிதங்களுக்கு (LTV) கடனுக்கான கடுமையான வழிகாட்டுதல்களின் மூலம் கட்டுப்பாட்டாளர் விதித்த கடன் சுருக்க நடவடிக்கைகள் வணிக வளர்ச்சிக்கு உதவாது என்பது ஒரு பரந்த கண்ணோட்டத்தில் இந்த வழிகாட்டுதல்கள் கடன் தரத்தை நிலைநிறுத்துவதில் நன்மை பயக்கும், இந்த வழிகாட்டுதல்கள் ஒரு பரந்த கண்ணோட்டத்தில், கடன் தரத்தை நிலைநிறுத்துவதில் பயனளித்தன. ஒட்டுமொத்தமாக இலங்கை மத்திய வாங்கி தொழில் துறையில் ஒழுங்குக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவதில் கவனம் செலுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் நிச்சயமாக நிதியியல் சேவைகள் துறையின் மிகவும் திடமான தோற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதால் சரியான பாதையில் முன்னெடுக்கப்படும் இந்தப் படிநிலைகளை நான் வரவேற்கின்றேன்.

இந்த நிலைமைக்கு மத்தியில், 2018/19 ஆண்டு பெரும்பாலான தொழில்களுக்கு கடினமான ஆண்டாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டின் முக்கிய பாகங்களில் கிடைக்கப்பெற்ற போதிய மழைவீழ்ச்சி காரணமாக விவசாயத்துறை செழிப்பு மிக்கதாக இருந்தது. நாம் எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியில் இந்நிலை ஒரு சிறந்த விடயமாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், முந்தைய ஆண்டுகளில் வறட்சி அல்லது வெள்ளம் ஏற்பட்டதால், இந்த சிறந்த அறுவடை மூலம் பெறப்பட்ட நன்மைகளை விவசாயத்துறையினால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இந்நிலை காரணமாக உழைப்பின் ஒரு பகுதி பழைய கடன்களை தீர்ப்பதற்கு செலவாகியது.

கம்பெனியின் செயற்பாடு

வரிகளுக்கு பின் கம்பெனியின் நிகர இலாபம் 22% இனால், 542 மில்லியன் ரூபாய்கள் வரை வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். இது ஒரு மைல்கல்லாகும். வட்டி வருமானத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி 26.7% அதிகரித்து ரூ. 3.8 பில்லியன் ஆகவும், கட்டணம் மற்றும் கமிஷன் வருமானம் 34% அதிகரித்து ரூ. 237 மில்லியனாக காணப்பட்டமை என்பன நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு காரணிகளாக இருந்தன. மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டை பொருளாதாரத்திற்கு வெளிப்புற ஆதரவின் அடிப்படையில் ஒரு சிறந்த ஆண்டு என்று சொல்ல முடியாது. உயரும் வட்டி மற்றும் கடன் மீட்பு வரி விதித்தல் போன்ற காரணிகள் வளர்ச்சியைத் தடுக்கும் நேரடி மாறிகளாகக் காணப்பட்டன. குறைபாட்டுக் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகள் 58.7% அதிகரித்து ரூ. 282 மில்லிங்களாக ஆகியமை காரணமாக கடுமையான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களின் பணப்புழக்க நிலைகள் பின்வாங்கத் தொடங்கியதால் முக்கியமாக வெளிப்புற இயக்க சூழலுக்கு காரணமாக இருந்தது.

ஆண்டின் மீதின் ஆண்டு என்ற அடிப்படையில் வட்டி செலவில் YOY 27.8% அதிகரித்து ரூ. 1.6 பில்லனாகக் காணப்பட்டமைக்கு விகிதங்களின் அதிகரிப்பு மற்றும் கடன் வாங்கிய குவாண்டம் ஆகிய இரண்டும் காரணமாக அமைந்திருந்தது. பின்னரான விடயத்தின் வளர்ச்சியானது கிளை விரிவாக்கம் மற்றும் மென்பொருள் உருவாக்கம் என்பவற்றை தவிர்த்து முழுக்க முழுக்க அடிப்படை வியாபாரமான கடன் வழங்கலால் ஏற்பட்டதாகவே அமைந்துள்ளது. ஆட்கள் தொடர்பில் வெளித்தெரியும் 31% செலவீன வளர்ச்சியான ரூ. 480 மில்லியன் ஆளணியின் எண்ணிக்கை 129 இல் இருந்து 518 ஆக அதிகரிக்கப்பட்டமையினால் ஏற்பட்டது. 80% ஆன புதிய பணியாளர்கள் நேரடியான வருமானமீட்டல் செயற்பாடுகள் மற்றும் கிளை விரிவாக்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக உள்வாங்ககப்பட்டனர். நிருவாக மற்றும் விற்பனை செலவு அதிகரிப்பு 29% ஆன ரூ. 698 மில்லியன் ஆகக் காணப்பட்டது. இம்மேளத்திகச் செலவுகள் வியாபார நடவடிக்கை விரிவாக்கம் மற்றும் தங்கக் கடன் சேவை உருவாக்கம் என்பவற்றால் ஏற்பட்டன. மொத்த செலவுகள் பட்ஜெட் அளவிற்குக் குறைவாக இருப்பதை நிர்வாகம் உறுதிசெய்தது மற்றும் பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றியது, அவை நல்ல நிதி முடிவுகளை அடைவதற்கு முக்கிய பங்களிப்பு காரணிகளாக இருந்தன.

சிங்கர் ஃபைனான்ஸ் ஹொரன, கம்பளை மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் புதிய கிளைகளை ஆரம்பித்ததுடன் குருநாகலையில் இரண்டாவது கிளையொன்றும் திறக்கப்பட்டது. எமது மாத்தறைக் கிளை தெற்குப் பிராந்தியத்தின் மையப் பகுதியொன்றுக்கு மிகவும் வெளித்தெரியும் மற்றும் இடவசதி மிக்க இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. மிகவும் இயங்குநிலை கொண்ட வளர்ச்சித்திட்டங்களை கருத்திற் கொண்டு எமது தாய்க் கம்பெனியின் நுகர்வோர் பொருட்கள் விற்கும் பாணந்துறை, வெள்ளவத்தை மற்றும் வவுனியா கிளைகளில் காணப்பட்ட சேவை நிலையங்கள் இடவசதி, வெளித்தெரியும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வசதி மிக்க இடங்களுக்கு மாற்றப்பட்டன. இச்சேவை நிலையங்களுக்கு கிளை அந்தஸ்தினை வழங்குமாறு நாம் மத்திய வங்கிக்கு விண்ணப்பம் செய்துள்ளோம். மேற்குறிப்பிடப்பட்ட எட்டு புதிய இடங்களும் உயர்த்தப்பட்ட இயக்க இயலுமைகள், உயர்த்தப்பட்ட சேவை நியமங்களுடன் வெளித்தெரியும் வியாபார நாமத்துடன் வியாபாரத்தை அதிக அளவில் விரிவாக்கவுள்ளன. எமது தங்கக் கடன் சேவையினை நாம் 14 இடங்களுக்கு விரிவாகியுள்ளோம் அத்துடன் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் ஆண்டில் தங்கக் கடன் சேவை மேம்பாட்டில் ஒன்று கூட்டப்பட்ட அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடு காரணமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது என்பதை நான் மகிழ்வுடன் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த புதிய சேவை செயற்படுத்தப்படும் வேகம் மற்றும் எட்டப்பட்ட வளர்ச்சி குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். மிக விரைவில் தங்கக் கடன் சேவை எமது வியாபாரத்தில் லீசிங் செயற்பாட்டுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை விரைவில் எட்டிப்பிடிக்கவுள்ளது. 2018 ஆம் ஆண்டில் சிங்கர் ஃபைனான்ஸ் இனது செயற்படாத சொத்துக்களின் விகிதம் 3.10% ஆகக் காணப்படுகின்றது, இது 7.7% என்ற துறையின் அவ்விகிதத்தை விடக் குறைவானதாகும்.

பணியாற்றுவதற்கு மிகச் சிறந்த இடம் – எமது பணியாளர்களின் நோக்கு

மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் ஆண்டில் உங்களின் நிறுவனம் “இலங்கையில் பணியாற்றுவதற்கு மிகச்சிறந்த இடம்” ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டதை அறியத்தருவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட 25 கம்பனிகளின் குழுவில் நாமும் அங்கம் வகிக்கின்றோம். இச்சான்றிதழ் பெறப்பட்டமை பணியாளர்கள் நியாயமாக நடத்தப்படும் உள்வாங்கும் கலாச்சாரம் ஒன்றை கம்பெனி கொண்டிருப்பதையும் நாம் அனைவரும் மகிழ்ச்சி மிக்க பணிபுரியும் சூழல் ஒன்று காணப்படுவதை பிரதிபலிக்கின்றது. ஊக்கமளிக்கும் இரண்டு பெற்றோர் அமைப்புகளின் வளமான பாரம்பரியத்திலிருந்து நம்மைத் தொடர்ந்து கொண்டுவரும் திடமான கலாச்சார பிரதிபலிப்புகளுக்கு நாங்கள் ஊக்கமளிக்கும் இரண்டு தாய் நிறுவங்களுக்கும் நன்றி கூறுகிறோம், அதாவது சிங்கர் (இலங்கை) பி.எல்.சி மற்றும் ஹேலீஸ் பி.எல்.சி என்பனவே அவையாகும். இந்த வலுவான உறவிலிருந்து உருவாகும் நேர்மறையான உணர்வுகள், இந்த அங்கீகாரத்தை அடைவதற்கு பங்களிப்பு காரணிகளாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை.

“பணி புரிவதற்கு சிறந்த இடமாக” அங்கீகாரம் பெறுவதற்கு அதீத முயற்சி அவசியமானதாகும், ஏனெனில் சிறந்த நிறுவனங்கள் உயர் அளவில் அறிவியல் ரீதியாக வழிகாட்டப்பட்ட முறையொன்றின் மூலமே தெரிவு செய்யப்பட்டன. கொம்பனியின் ஒட்டுமொத்த பணியாளர்களிடமும் நம்பகத்தன்மை, கௌரவம், நியாயம், பெருமை மற்றும் பரஸ்பர பணியாளர்கள் இடையே காணப்படும் ஒற்றுமை போன்ற விடயங்கள் அடங்கிய வினாக்கொத்து மூலமான தகவல் சேகரிப்பு இதற்காக மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தக நாம அடையாளம்

இவ்வருடத்தில் சிங்கர் ஃபைனான்ஸ் இனால் வர்த்தக நாம மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நுட்பமான, ஆனால் நவீன மாற்றங்களுடன், எங்கள் புதிய கார்ப்பரேட் அடையாளத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய கிளை இருப்பிடங்களின் அனைத்து முகப்புகள் மற்றும் தோற்றங்களுடன் பிராண்ட் பெயருக்கு மிகவும் துடிப்பான மற்றும் வண்ணமயமான வவர்த்தக நாம அடையாளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய அடையாளம் நிறுவனத்தின் தற்போதைய இருப்பிடங்களுக்கு கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த ஆண்டில் நிறுவனம் கொழும்பு 3 இல் ஒரு மூலோபாய மற்றும் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரத்யேக தலைமை அலுவலகத்திற்கு இடம் பெயர்ந்தது. இது சிங்கர் ஃபைனான்ஸ் பிராண்டிற்கு அதிகத் தெரிவுநிலையை உருவாக்கும் – நிதிச் சேவைத் துறையில் எங்கள் இருப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நிறுவனம் அச்சு, சமூக ஊடகங்கள், வானொலி மற்றும் வரி விளம்பர ஊடகங்களுக்குக் கீழே தனது பிராண்ட் இருப்பை அதிகரித்துள்ளது, மேலும் சிங்கர் ஃபைனான்ஸிற்கான வலுவான மற்றும் சுயாதீனமான கிளை அடையாளத்தை தொடர்ந்து உருவாக்கப்படவுள்ளது. ஒரு சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை நிர்வாகம் அயராது வலியுறுத்தியது மற்றும் ஈர்க்கிறது, இது போட்டியில் இருந்து நம்மை வேறுபடுத்தக்கூடிய ஒரு மாறி என்று நாங்கள் நம்புகிறோம். வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் உறவு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் குழுவின் கவனம் உள்ளது என்பதையும் நிறுவனம் அறிந்திருக்கிறது.

எதிர்கால வெளி நோக்கு

கிளை வலையமைப்பில் துரித வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் குத்தகை மற்றும் தங்கக் கடன்களின் முக்கிய வணிகத்தில், அதன் உண்மையான திறனை எட்டும் நோக்கத்துடன் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து நிறுவனம் கவனம் செலுத்தும். ‘அவசர உணர்வோடு’ இந்த வளர்ச்சியை அடைவதில், மேலாண்மை வெளிப்புற ஆபத்து காரணிகளை கவனத்தில் கொண்டிருக்கும், மேலும் பொருளாதார காரணிகள் நினைத்தபடி நகராவிட்டால், அதே ‘அவசர உணர்வோடு’ மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்து கொள்ளலாம். புதிய சந்தைகளில் நுழைவதற்கும், கிளை மற்றும் சந்தைப்படுத்தல் ஊழியர்களின் விரிவாக்கம் மூலம் புதிய வணிக வசதிகளை உருவாக்குவதற்கும் கூடுதலாக, நியாயமான விகிதாச்சாரத்தில், பாதுகாப்பான குத்தகை வசதிகளின் சராசரி கடன் அளவு அதிகரிப்பதில் கவனம் செலுத்துவோம். இந்த அணுகுமுறை, கமபனியின் அபாய நேரிடர் எதிர்கொள்வதில் உள்ள விருப்பு மற்றும் நேர்மறையற்ற வெளியக சூழலில் சரியானது என நான் நம்புகின்றேன்.

ஒரு சிறந்த சேவையை வழங்குவதன் மூலமும் சிங்கர் ஃபைனான்ஸ் எங்கள் திறமையான ஊழியர்களின் திறன்கள் மற்றும் திறன்களைப் பயன்படுத்தியும் பெறக்கூடிய பல வாய்ப்புகள் சந்தையில் உள்ளன. எங்கள் ஊழியர்களின் திறன்களில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடந்த காலத்தில் நிறுவனம் நிலையான வைப்புகளில் போட்டி விகிதங்களை வழங்க தயங்கியது, அதற்கு பதிலாக மற்ற ஆதாரங்கள் மூலம் கடனை திரட்ட ஆர்வமாக இருந்தது. நிறுவனத்தின் புதிய உத்திகளுக்கு ஏற்ப, சிங்கர் ஃபைனான்ஸ் இப்போது நிலையான வைப்பு வணிகத்தில் ஒரு போட்டி மிக்க மாறியுள்ளதுடன், இந்த பிரிவை வளர்ப்பதற்கான விரிவான திட்டங்களையும் கொண்டுள்ளது என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நிதி நிறுவனத்திற்கான முக்கிய மற்றும் பிரதான நிதி மூலோபாயமாக, பரந்த அடிப்படை நிலையான வைப்பு திரட்டல் அமைந்துள்ளது என்று நான் நம்புகிறேன்.

எமது உறுதியானஅடித்தளத்தில் இருந்து கட்டியெழுப்புதல்

சிங்கர் ஃபைனான்ஸ் நெறிமுறைகள் மற்றும் குழும ஆட்சி ஆகியவற்றில் மிகவும் வலுவான அடித்தளத்துடன் செயல்படுகிறது. இந்த மதிப்பீடுகளையும் கொள்கைகளையும் பராமரிப்பதற்கான மரபுகளை இறுதியில் முன்னெடுத்துச் செல்லும் ஊழியர்கள் தான் எமது ஊழியர்கள் என்று நாங்கள் நம்புவதால், எங்கள் ஆட்சேர்ப்பு தேர்வில் இதைப் பிரதிபலிக்க நிறுவனம் நிறைய முயற்சிகள் செய்கிறது. எங்கள் அனைத்து ஊழியர்களிடமிருந்தும் சிறந்த நடத்தை தவிர வேறொன்றையும் நாங்கள் கோரவில்லை.

எங்கள் அடித்தளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன, எங்கள் மூலதனம் மற்றும் பணப்புழக்க நிலைகள் வலுவானவை, ஒருங்கிணைந்த இடர் மேலாண்மைக் குழு மற்றும் கடன் குழுவின் வடிவத்தில் மிகவும் ஆர்வமுள்ள மற்றும் அனுபவம் வாய்ந்த குழுவினால் எங்கள் அபாய நேரிடர் மீதான விருப்பு நன்கு கண்காணிக்கப்படுகிறது. இதுபோன்ற நிலையிலும், நாங்கள் திருப்தியுடன் இருக்க மாட்டோம், மேலும் வெளி மற்றும் உள் வணிகச் சூழலுக்கு ஏற்ப எங்கள் இடர் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

பேண்தகு தன்மை மற்றும் குழுமத்தின் சமூக பொறுப்பாண்மை

நிறுவனமும் ஊழியர்களும் ஒரு பேண்தகு நிலையான வணிகச் சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளனர். ஒரு வேலைவாய்ப்பு உருவாக்குனராக நாம் பூர்த்திசெய்யும் மற்றும் பேண்தகு நிலையான வேலைகளை நிறுவ முயற்சிக்கிறோம். ஒரு ஊழியர் எங்களுடன் சேரும்போது, அவர் தனது திறனின் முழுமையை அடையும் வரை அவர் அல்லது அவள் வழிகாட்டப்பட்டு வளர்ந்திருப்பதை உறுதிசெய்கிறோம். வழிகாட்டுதல் செயல்பாட்டில் வாடிக்கையாளர்கள் மற்றும் பரந்த பங்குதாரர்களுடன் மிக உயர்ந்த நெறிமுறை தரங்களுடன் தொடர்புகொள்வதன் முக்கியத்துவம் குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளன. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான நிதி முன்மொழிவுகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும் நாங்கள் முயற்சி செய்கிறோம், இது ஒரு நிலையான நிறுவனத்தை உருவாக்குவதற்கான முதல் செயல்களில் ஒன்றாகும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களை நாங்கள் கவனிக்கும் அதே வேளையில், எங்களது உதவி தேவைப்படும் ஒரு உலகம் உள்ளது. ஒரு அமைப்பாக நாங்கள் எப்போதுமே உறுதியுடன் இருக்கிறோம், நமது திறனுக்கு சமூகத்திற்கு உதவ வேண்டியதன் அவசியத்தை அறிந்துகொள்கிறோம், மேலும் அந்த ஆண்டில் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கம் சமூக மற்றும் உறவு மூலதனத்தின் கீழ் 80 முதல் 89 பக்கங்களில் பிரதிபலிக்கிறது.

பாராட்டுக்கள்

தலைமை நிர்வாகியாக எனது முதல் ஆண்டில் இந்த மாபெரும் அமைப்புக்கு தலைமை வழங்குவது ஒரு பாக்கியமாகும்; வருடத்தில் நாம் அடைந்ததை அடைய பலரின் ஒருங்கிணைந்த திறமையும் அர்ப்பணிப்பும் அவசியமாகும். தவிசாளர் திரு. அரவிந்த பெரேரா மற்றும் இயக்குநர்கள் குழு அவர்களின் மூலோபாய பார்வை மற்றும் மேற்பார்வைக்கு நான் நன்றி கூறுகிறேன். குழுமத் தவிசாளர் திரு. மோகன் பண்டிதகே, குழும இணைத் தவிசாளர் திரு. தம்மிகா பெரேரா மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி திரு. மகேஷ் விஜேவர்தன அவர்களின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஊக்கம் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒரு ஈர்க்கப்பட்ட மற்றும் திறமையான குழு பல முனைகளில் வழங்க கடினமாக மற்றும் அவசர உணர்வோடு உழைத்தது, விரைவான வளர்ச்சியை வழங்குவதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர், மேலும் மூத்த நிர்வாகக் குழுவின் தோல்வியற்ற நட்புறவு மற்றும் அமைப்பின் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாகவும் பாராட்டுகிறேன்.

மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டின் போது, நிறுவனத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆர்.எஸ். விஜீவீரா நீண்ட மற்றும் சிறப்பான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார். அவர் வழங்கிய வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும், நிறுவனத்திற்கு அவர் செய்த நீண்ட சேவைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவரது ஆட்சிக் காலத்தில் நிறுவனம் சீராக வளர்ந்து பல அடையாளங்களை அடைந்தது. திரு விஜேவீரா ஒரு அற்புதமான ஓய்வுகாலத்தை
கழிக்க வாழ்த்த விரும்புகிறோம். எங்கள் உண்மையான பாராட்டு, முன்னாள் குழு தலைமை நிர்வாக அதிகாரி திரு. அசோகா பீரிஸ் அவர்களுக்கும் உருத்தாகின்றது, சிங்கர் நிதி வாரியத்தில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய அவர், நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக உழைத்தவராகும்.

மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை மத்திய வங்கியின் வங்கி சாரா மேற்பார்வை மற்றும் அவரது அதிகாரிகள், பரிவர்த்தனை கட்டுப்பாட்டாளர் மற்றும் ஜெனரல், கடன் தகவல் பணியகத்தின் மேலாளர் மற்றும் பணியாளர்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் எங்கள் பாராட்டுக்களை பதிவு செய்ய இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன். எங்கள் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் வணிக கூட்டாளர்களை அவர்களின் மதிப்புமிக்க ஆதரவு மற்றும் பங்களிப்புக்காக அங்கீகரிக்கவும், அடுத்த ஆண்டுகளில் சிங்கர் நிதி பயணத்தில் அவர்கள் தொடர்ந்து பங்காளிகளாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.

துஷான் அமரசூரிய
பிரதம நிறைவேற்று அதிகாரி

தவிசாளரின் மீளாய்வு

தவிசாளரின் மீளாய்வு

“கருத்திற் கொள்ளப்படும் காலப்பகுதியில் அவர்களின் கம்பெனியின் செயற்பாடு பற்றி மகிழ்ச்சி அடைவதற்கு எமது பெறுமதி மிக்க பங்குதாரர்கள் அனைத்துக் காரணங்களையும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட பொருளாதாரப் பின்புலத்துக்கு எதிராக போராடிப் பெறப்பட்ட வெற்றியாக அது அமைந்துள்ளது …

சிங்கர் நிதி நிறுவனத்தின் (Singer Finance (Lanka) PLC) 2018/2019 காலப்பகுதிக்கான ஆண்டு அறிக்கை மற்றும் கணக்காய்வுக்கு உட்படுத்த்தப்பட்ட நிதியியல் தகவல்களை உங்கள் முன் கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. கருத்திற் கொள்ளப்படும் காலப்பகுதியில் அவர்களின் கம்பெனியின் செயற்பாடு பற்றி மகிழ்ச்சி அடைவதற்கு எமது பெறுமதி மிக்க பங்குதாரர்கள் அனைத்துக் காரணங்களையும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட பொருளாதாரப் பின்புலத்துக்கு எதிராக போராடிப் பெறப்பட்ட வெற்றியாக அது அமைந்துள்ளது. குறித்த பொருளாதாரப் பின்புலத்தில் ஆண்டின் பிந்திய அரைவாசிக் காலப்பகுதியில் நிச்சயமற்ற நிலை ஒன்றும் காணப்பட்டது. கடன் வழங்குதல் மற்றும் அதனுடன் இணைந்துள்ள அபாய நேரிடரை தூரமாக்கல் என்பவற்றின் இடையே நாம் சரியான சமநிலையை பேண வேண்டிய அவசியம் காணப்பட்டதால் அவ்வாண்டுக்கான பயணம் விசேடமாக சிரமம் மிக்கதாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், சிங்கர் நிதி நிறுவனத்தின் திறன் மிக்க அணி தனக்கு முன்னால் இருந்த பணிக்கு தேவையான அளவை விட திறனைக் கொண்டிருந்ததால் அவர்களால் வெற்றிகரமாக சிறந்த சமநிலையைப் பேண முடிந்ததால் இத்துறையின் சராசரியை விட மிகவும் அதிகமாக சிங்கர் நிதி நிறுவனத்தால் செயற்பட முடிந்தது. துரதிர்ஷடவசமாக, நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சியினால் மேலும் பாரிய வளர்ச்சியை இலகுபடுத்துவதற்கான ஆதரவை வழங்க முடியவில்லை.

பொருளாதார செயற்பாடு

மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் ஆண்டில் உண்மையான பொருளாதாரச் செயற்பாடுகளின் அடிப்படையில் இலங்கையின் முன்னேற்றம் பல காரணங்களினால் எதிர்பார்க்கப்பட்டதற்கும் குறைவானதாகவே அமைந்திருந்தது. பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பாதை முடக்கப்பட்ட நிலையில் அது பல துறைகளில் பின் விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. 2017 ஆம் ஆண்டு 3.4 சதவீதமாக அமைந்திருந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 2018 ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருந்தது. விவசாயத்துறை முந்தைய ஆண்டில் எதிர்நோக்கிய தீவிர காலநிலைப் பிரச்சினைகளில் இருந்து மீட்சி அடைந்து குறித்த ஆண்டில் எட்டப்பட்ட 4.1% வளர்ச்சியை விட 0.9% என்ற ஓரளவு வளர்ச்சியை அடைந்து கருத்திற் கொள்ளப்படும் ஆண்டில் 4.8% என்ற வளர்ச்சியை காண்பித்தது. சேவைகள் துறையின் வளர்ச்சியில் நிதிதியியல் சேவைகள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 4.7 சதவீதமாகக் காணப்பட்ட இத்துறையின் வளர்ச்சி முந்தைய ஆண்டில் எட்டப்பட்ட 3.6 சதவீத வளர்ச்சியை விட அதிகமாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீடுகளை மேற்கொள்வோரின் மனநிலை மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்ததால் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் (CSE) தாழ்ந்த செயற்பாட்டு மட்டம் கொண்ட இன்னொரு வருடத்தை தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் ஏற்பட்ட தீங்கான விடயங்கள் காரணமாகப் பதிவு செய்தது.

 

நிதியியல் துறையின் செயற்பாடு

ஒட்டு மொத்த நிதியியல் துறையும் 2018 ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த போதும், அனுமதிப்பத்திரம் பெற்ற நிதிக் கம்பெனிகள் (LFCs) மற்றும் விசேட லீசிங் கம்பெனிகள் (LFCs) என்பவற்றின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டு கடன் வளர்ச்சி மற்றும் இலாபமீட்டும் திறன் என்பன குறைவடைந்து மந்த நிலையிலேயே காணப்பட்டது. இத்துறையின் கடன் வழங்கும் நடவடிக்கைகள் பேரண்ட கட்டுப்பாட்டு (macroprudential) மற்றும் பிஸ்கால் கொள்கை நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்டது. குறித்த கொள்கை நடவடிக்கைகள் மோட்டார் வாகனங்களின் இறக்குமதி மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான கடன் வசதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டன. அதிகரித்த நிதியிடல் செலவுகள் மற்றும் செயற்படாத கடன்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கடன் இழப்பு ஏற்பாடுகள் காரணமாக இத்துறையின் இலாபமீட்டும் திறன் பிரதானமாக குறித்த ஆண்டில் குறைவடைந்து. குறித்த ஆண்டில் துறையின் இலாபமீட்டும் திறன் நோக்கிய அழுத்தத்தின் அறிகுறிகள் சொத்துக்களின் மீதான வருமானம் (ROA) மற்றும் விகிதப் பங்குகளின் மீதான வருமானம் (ROE) என்பவற்றில் காணப்பட்ட வீழ்ச்சியில் பிரதிபலித்தது. மிகவும் தேவையான தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கையாக, இலங்கை மத்திய வங்கி LFCs மற்றும் SLCs என்பவற்றின் மீதான மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டு சட்டக வடிவமைப்பை வலுப்படுத்தியதுடன் இத்துறை மீது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நலிவான LFCs களை சீர்திருத்த அல்லது மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது.

“நடுத்தர அளவுடைய, நன்கு இயங்கும் நிதிக் கம்பெனி ஒன்றுக்கு அதிக கிளைகளை உருவாக்குதல் சிறந்த வளர்ச்சி மூலோபாயமாக அமையும். இந்த ஆண்டில் 4 புதிய கிளைகள் திறக்கப்பட்டதுடன் 3 சேவை நிலையங்கள் இடம் மாற்றப்பட்டன.”

 

கம்பெனியின் செயற்பாடு

மீளாய்வு மேற்கொள்ளப்படும் ஆண்டில் பல நிதியியல் நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்கிய போதும் கம்பெனி 22% வளர்ச்சியைக் காண்பித்துள்ளமை சிறந்த அடைவாகக் கருதப்படலாம். ஒட்டுமொத்தமாக, கம்பெனியின் செயற்பாடுகள் தொடர்பில் நான் திருப்தியடைவதுடன் இச்சயற்பாட்டுக்கான பாராட்டுக்கள் பணிப்பாளர் சபை வழங்கிய சிறப்பான அறிவுரைகள் மற்றும் அம்மூலோபாயங்களை வினைத்திறனுடன் செயற்படுத்திய பிரதம நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் கம்பெனியின் பணியாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களாகும். 2018/19 காலப்பகுதி பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த நிதியியல் துறைக்கும் அழுத்தமான காலப்பகுதியாக அமையவுள்ளமைக்கு ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், பணியாளர்கள் தமது கடன் வழங்கல் செயற்பாடுகளில் கவனத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். அதே நேரத்தில், லீசிங் எமது அடிப்படை வியாபாரமாக அமைவதால் தனது அடிப்படைத் துறையில் கம்பெனி உச்ச வளர்ச்சியை அடைவதும் முக்கியமானதாகும். இருந்த போதும், நாம் வருடத்தின் எஞ்சிய பகுதிக்கு கட்டுப்பாடு மிக்க பாதையை தெரிவு செய்துள்ளதுடன் எமது வாடிக்கையாளர்களின் ஈட்டுக் கடன்கள், நுகர்வுப் பொருட்கள் மற்றும் கடன் அட்டைகள் போன்றவற்றில் தடுப்புகளை ஏற்படுத்த எண்ணியுள்ளோம். இது கம்பெனியின் உயர் வளர்ச்சி வீதங்களை பாதிக்கும் என்ற யதார்த்தத்தை நாம் அறிந்துள்ள போதும் அது நிச்சயமாக சிறந்த அடிப்படைகளை உறுதி செய்யும். மதிப்பீடு செய்யப்படும் ஆண்டில், கம்பெனி தனது பொருட்களின் வரிசையை அதிக கிளைகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட தங்கக் கடன் 14 கிளைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காலவோட்டத்தில் அனைத்து சிங்கர் பினான்ஸ் கிளைகளுக்கும் இந்த தங்கக் கடன்கள் விரிவுபடுத்தப்படவுள்ளன. இது காலவரை கம்பெனியின் விரிவாக்கம் கட்டுப்பாடு மிக்கதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கிளையும் முதல் முதலீடுகள் மற்றும் மனித வளச் செலவுகளை உகந்ததாக ஆக்கும் வகையில் சரி நிகர் நிலையை அடைவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றன. நடுத்தர அளவில் அமைந்த மிகவும் நன்றாக நடத்திச் செல்லப்படுகின்ற நிதிக் கம்பெனி ஒன்றாக, அதிக கிளைகளை திறப்பது சரியான வளர்ச்சி மூலோபாயமாக அமையும். இந்த ஆண்டில் 4 புதிய கிளைகள் திறக்கப்பட்டதுடன் 3 சேவை நிலையங்கள் அதிக முக்கியத்துவம் மிக்க இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், சில சிங்கர் பினான்ஸ் கிளைகள், சிங்கர் விற்பனை நிலையங்களில் இயங்கி வந்ததுடன் அவை அதிகமான புறக்கணிக்கப்பட்ட இடங்களாக அமைந்திருந்தன. அத்துடன் அவற்றை காட்சியறைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மாத்திரமே அணுகும் நிலை காணப்பட்டது. தற்பொழுது அவை தனியான கிளைகளாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், சிங்கர் பினான்ஸ் தனித்துவ அடையாளம் கொண்டதாக காணப்படுவதுடன் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் நிறைவேற்றும் நிலையில் உள்ளது. இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் இலக்கம் 498, R.A. டீ மெல் மாவத்தை, கொழும்பு – 03 என்ற முகவரியில் அமைந்துள்ள புதிய இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள தலைமை அலுவலகம் குழும வியாபார நாமம் ஒன்றின் பாரிய வெளித்தெரியும் தன்மையை பெற்றுக் கொண்டது. எதிர் வரும் காலங்களில் சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தின் நிலைப்படுத்தலை வியாபார நாமம் மற்றும் இடங்கள் தொடர்பில் வலுப்படுத்துவதற்கான இயங்கு நிலை கொண்ட மூலோபாயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. தங்கக் கடன்களை ஆரம்பித்தல் மற்றும் கிளைகளை மீள்கட்டமைத்தல் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் காரணமாக இவ்வருடத்தில் எமது இலாபமீட்டும் திறன் சிறிதளவு குறைந்துள்ளது, எவ்வாறாயினும், எதிர்வரும் மாதங்களில் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது எம்மால் இம்முதலீடுகளின் மீது பாரிய வருமானங்களைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம். கடன் அட்டைகள் நாம் சில தகவிணக்க பிரச்சினைகளை எதிர்நோக்கியமையினால் எதிர்வு கூறப்பட முடியமான எதிர்காலம் வரை அதன் வியாபார அளவினைக் குறைக்க எண்ணியுள்ளோம்.

 

எதிர்காலத்தை நோக்கியதாக

இந்த வருடத்தில் எமது கவனம் கம்பெனியின் வளங்களை உகந்த அளவிற்கு மாற்றுவதில் செலுத்தப்பட்டிருந்தது. சுற்றுலா மற்றும் கட்டுமானம் ஆகிய இரு பிரதான துறைகளும் எமது எதிர்பார்ப்பு மிக்க துறைகளாக இருந்த போதும், அவ்விரு துறைகளும் இவ்வருடத்தில் வேகக் குறைவை எதிர்கொண்டதுடன் 2019 ஆம் ஆண்டு உயர் வேகத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது, எனினும் எதிர்வரும் நிதியாண்டின் முதல் அரைவாசிப் பகுதி சவால் மிக்கதாகவே அமையும். மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் வருடத்தில் உறுதியான செயற்பாட்டைக் கொண்டாடும் அதேவேளை நலிவு மிக்க விடயங்கள் வலுப்படத்தப்பட வேண்டும் என்பதையும் கம்பெனி அறிந்துள்ளது. உதாரணமாக, வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதில் சிறந்த திட்டமிடல் மற்றும் நேர்மறையான நிலைப்பாடு அவசியமாக அமைகின்றது. எதிர்கால வளர்ச்சிக்கான தடைகள் கடந்த வருடம் அமைந்திருந்த அதே தடைகளாகவே காணப்படுகின்றன. அவையாவன; வாகன இறக்குமதியில் காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் லீசிங் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் தடைகள் மற்றும் வரிகள் என்பனவாகும். இத்தடையினை சமாளிப்பதற்கு லீசிங் செயற்பாட்டில் பெரிய நுழைவுச்சீட்டு அளவுகளை கொள்வனவு செய்வதற்கு கம்பெனி திட்டமிட்டுள்ளது. NPL கள் எமது துறையின் இணைநிலை நிறுவனங்களை மிகவும் குறைவானவையாக அமைந்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒட்டுமொத்தமாக, பொருளாதார மந்த நிலை சிங்கர் நிதி நிறுவனத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. கட்டுப்பாடு மிக்க முகாமைத்துவம் மற்றும் கம்பெனி பழைய வாகனங்களின் சந்தையில் செலுத்தியமை என்பன இதற்குரிய காரணங்களாக அமைகின்றன.

கம்பெனி தனது நிலையான வைப்புகள், தங்கக் கடன்கள் மற்றும் உறுதியாக வளர்ச்சியடையும் வியாபாரங்களில் கவனம் செலுத்துதல் என்பவற்றின் மூலம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது செல்வமாகக் காணப்படும் திறமை மற்றும் அனுபவம் என்பவற்றின் மூலம் சிங்கர் நிதி நிறுவனம் அதிக சந்தைப் பங்கைப் பெறுவதற்காக இயங்குநிலை கொண்ட எதிர்கால வளர்ச்சி மூலோபாயத்தை உருவாக்கியுள்ளோம். மீளாய்வு செய்யப்படும் வருடத்தில் தங்கக் கடன் திட்டத்தை முன் கொண்டு செல்வதற்கு புதிய ஆளணி ஒன்று பணிக்கு அமர்த்தப்பட்டதுடன் அவர்கள் கம்பெனியின் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இயக்க நிபுணத்துவத்தை அடையும் வகையில் ஆளணியினை பயிற்றுவிப்பதில் முதலீடுகளை மேற்கொள்வதில் கம்பெனி கடப்பாடு மிக்கதாகக் காணப்படுகின்றது. சிங்கர் பினான்ஸ் நிறுவனம் தற்பொழுது இரண்டு பங்காளர்களைக் கொண்டுள்ளது, சிங்கர் (ஸ்ரீ லங்கா) மற்றும் ஹேலீஸ் PLC என்பனவே அவையாகும். முக்கியத்துவம் மிக்க இந்த இரண்டு குழுக்களும் இலங்கையின் குழுமத் துறையின் உச்சத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளனவாகும். இயற்கையாக, மேலெழும் வாய்ப்புகளின் நன்மையை பெற்றுக்கொள்வதற்கு எமது ஒன்றிணைந்த சக்தியை தொடர்ச்சியாக பயன்படுத்தவுள்ளோம். குழுமங்களின் ஒன்றிணைந்த சக்தியைப் பயன்படுத்தும் வேளை, சிங்கர் நிதி நிறுவனம் சுயாதீனமாக தனது தனித்துவம் மிக்க அடையாளத்தை உருவாக்குவதற்காக மற்றும் விரிவாக்குவதற்காக வாய்ப்புகளை தேடும். கம்பெனியானது தனது வாடிக்கையாளர்களுக்கு மற்றும் வைப்பீட்டாளர்களை வளப்படுத்திடும் நிதியியல் தீர்வுகளை வழங்கும் பொறுப்பு மிக்க நிதியியல் நிறுவனமாக தனது நிலையை ஸ்திரப்படுத்தவும் விகிதப் பங்காளர்களுக்கு போதிய வருமானம் வழங்கும் அபிலாசைகளை கொண்டுள்ளது. இரண்டு பெற்றோர் நிறுவனங்களாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி வழிகாட்டல்களுக்கு அமைய சிங்கர் நிதி நிறுவனம் உயர் குழும ஆட்சி நியமங்களைப் பேணி வருகின்றது.

 

ஏற்புரை

எனது மீளாய்வில் கம்பெனியின் செயற்பாட்டை விபரமாகக் குறிப்பிட்ட பின்னர் சபையில் எனது சக உறுப்பினர்கள் எனக்கு வழங்கும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது மீதமாகவுள்ளது. சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. R. S . விஜேவீர அவர்கள் இந்நிறுவனம் ஆரம்பித்த காலம் தொடக்கம் 14 வருடங்கள் சேவை புரிந்துள்ளார். அவருக்கு எனது ஆழ்ந்த பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் அவரின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. அசோக பீரிஸ் அவர்களுக்கு குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் வழங்கிய பங்களிப்புக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகின்றேன். சவால் மிக்க சூழ்நிலைகளில் வளர்ச்சிக்கு தலைமைத்துவம் வழங்கியதன் மூலம் கம்பெனியின் வெற்றியில் பங்களிப்பதில் தமது விருப்பை வெளிப்படுத்திய பிரதம நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் ஆளணி பாராட்டுக்குரியது. கம்பெனியின் பங்காளர்கள் வழங்கும் தடையற்ற ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். அத்துடன், புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகிய எமது வழங்கப்பட்ட உறுதி மொழிகளை காக்கும் எமது இயலுமையில் நம்பிக்கை கொண்ட கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அரவிந்த பெரேரா
தவிசாளர் – சிங்கர் பினான்ஸ் (லங்கா) PLC

குழும பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு

குழும பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு

“சிங்கர் ஃபைனான்ஸ் ஒரு சவாலான பொருளாதார பின்னணியில் நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறனைப் பொறுத்தவரை வருடாந்த ரீதியில் (YoY) சிறந்த செயற்பாட்டு மட்டத்தை பதிவு செய்துள்ளது. “

மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டில் மொத்த வருவாய் மற்றும் நிகர லாபம் ஆகியவற்றில் உங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மொத்த வருவாயில் 26% வளர்ச்சியும், நிகர லாபத்தில் 22% வளர்ச்சியும் ஒரு சவாலான மற்றும் அதிக போட்டி நிறைந்த சந்தையில் சராசரி வளர்ச்சி எண்களை விட அதிகமாக உள்ளன. வாகன இறக்குமதியில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் காரணமாக ஒட்டு மொத்தத் துறையும் சந்தையில் கடன் வளர்ச்சியில் குறைவு ஏற்பட்டது.

 

மூலோபாயம் மற்றும் செயற்பாடு

சிங்கர் ஃபைனான்ஸ் ஒரு சவாலான பொருளாதார பின்னணியில் நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறனைப் பொறுத்தவரை வருடாந்த ரீதியில் (YoY) சிறந்த செயற்பாட்டு மட்டத்தை பதிவு செய்துள்ளது. மொத்த வருவாய் 26% வளர்ச்சியடைந்து ரூ. 3.8 பில்லியனை எட்டியதுடன் நிகர லாபம் 22% வளர்ச்சியுற்று ரூ. 540 மில்லியனை எட்டியது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடன் மீளச் செலுத்தல் வரிக்காக ரூ. 48 மில்லியன்கள் மற்றும் SFLRS-9 இன் கீழ் கடன்களின் குறைபாடுகளுக்காக ரூ. 35 மில்லியன்கள் மேலதிகமாக கணக்கீட்டுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும் கம்பெனியின் இலாபமீட்டும் திறன் அதிகரித்துள்ளமை குறிப்பிடப்படுவது பொருத்தமானதாகும். மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் 24% அதிகரித்து ரூ. 17.8 பில்லியனை எட்டியது, வைப்பு 13.8% அதிகரித்து ரூ. 6 பில்லியனை எட்டியது, மற்றும் நிகர வட்டி அளவு 26% அதிகரித்து ரூ. 2.1 பில்லியனை எட்டியது. எங்கள் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், சிங்கர் ஃபைனான்ஸ் 14.08% மூலதன போதுமான விகிதத்தை பராமரித்துள்ளது.

இந்த ஆண்டில் நிறுவனம் 4 புதிய கிளைகள் மற்றும் 3 சேவை நிலையங்களை ஆரம்பித்தமை மற்றும் ஒரு கிளையினை இடவசதி மிக்க மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வசதி மிக்க இடத்துக்கு மாற்றியதன் ஊடாக இயங்குநிலை மிக்க புவியியல் விரிவாக்க மூலோபாயத்தை முன்னெடுத்தது. கடந்த வருடம் திறக்கப்பட்ட இப்புதிய 8 இடங்களிலும் புதுப்பிக்கப்பட்ட வளர்ச்சி எண்கள் எமக்கு ஏற்கனவே அறிக்கையிடப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் சிங்கர் ஸ்ரீ லங்கா வளாகத்தில் அமைந்திருந்த சிங்கர் ஃபைனான்ஸ் தலைமை அலுவலகம் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டது. இது நிறுவனத்தின் வெளித்தெரியும் தன்மையை அதிகரித்ததுடன் சுயாதீனமான ஃபைனான்ஸ் நிறுவனமாக பலமான வர்த்தக அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

மிகக் குறுகிய காலத்துக்குள் சிங்கர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 14 இடங்களில் தங்கக் கடன் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவற்றுள் பெரும்பாலான இடங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இயங்கி வருகின்றன. தங்கக் கடன் செயலாக்கத்தை உருவாக்குவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் மனித வளம் என்பவற்றில் தனித்துவம் மிக்க முதலீடுகளை ஏற்படுத்துவது அவசியமாகும். வளர்ச்சி எண்களில் சில இயக்க மற்றும் நிருவாகச் செலவுகளில் வெளித்தெரிவதுடன் அவை தங்கக் கடன்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுடன் தொடர்பு மிக்கனவாக உள்ளன, எனினும் எதிர்வரும் வருடங்களில் இம்முதலீடுகளின் நன்மைகளை பெற முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளோம்.

சிங்கர் ஃபைனான்ஸ் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக செயற்படாத முற் கொடுப்பனவுகளின் விகிதத்தை தொடர்ச்சியாக இத்துறையின் நியம அளவுகளுக்கும் கீழாகப் பேணி வருகின்றது. இது மீளப்பெறுதல் முகாமைத்துவத்தில் கம்பெனி கொண்டுள்ள பலம் மற்றும் கடன்களை வழங்கும் போது பின்பற்றப்படும் கவனம் அத்துடன் கடன் வழங்கும் தொடர் செயன்முறையின் வினைத்திறன் என்பவற்றைக் காண்பிக்கின்றது. மீளாய்வு செய்யப்படும் ஆண்டில் செயற்படா முற்கொடுப்பனவுகளின் விகிதம் 3.10% ஆகக் காணப்படுகின்றது, இது நிதித்துறையின் சராசரிப் பெறுமதியிலும் கீழானதாகும். இது கடுமையான தீய கடன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பாரம்பரியமான கடனை இரத்து செய்யும் எண்ணிக்கைகளின் பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபை ரூ 1.10 இனை பாங்கொன்றிற்கான பாங்கிலாபமாக அனுமதித்துள்ளனர். இது 41% செலவின விகிதமாகக் காணப்படுவதுடன் கடந்த வருட பாங்கிலாபத்துடன் ஒப்பிடும் வேலை பங்கொன்றின் மீதான 13.4% வளர்ச்சியைக் காண்பிக்கின்றது.

 

சிங்கர் குழுவின் ஒத்துழைப்புகள்

லீசிங் வியாபாரத்தில் பிரதான செயற்பாட்டாளராக முன்னேறியுள்ள சிங்கர் ஃபைனான்ஸ் வருமானத்தில் 80% லீசிங், தங்கக் கடன்கள் மற்றும் ஏனைய கடன் வகைகளில் இருந்தே பெறப்படுகின்றது. இருப்பினும், சிங்கர் மெகாவுக்கு நிதியளித்தல், சிங்கர் இலங்கையின் கிளை நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்ட பெரிய குழு விற்பனைக்கு நிதியளித்தல் மற்றும் குழுவின் சப்ளையர்களின் விலைப்பட்டியல் காரணியாக்கல் போன்ற சில ஒருங்கிணைந்த நிதி வாய்ப்புகளில் சிங்கர் நிதி ஒத்துழைக்கிறது. இந்த வணிக வாய்ப்புகள் சிங்கர் ஃபைனான்ஸுக்கு அதிக மகசூல், குறைந்த இடர் நிதி வாய்ப்புகளை வழங்குகின்றன மற்றும் அமைப்பு மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்குகின்றன.

சிங்கர் குழு ஹேலீஸ் பி.எல்.சியின் ஒரு பகுதியாக இருப்பதால், எங்கள் மூலோபாய திசை இதுவரை ஒரு சுயாதீனமான மற்றும் வலுவான நிதி நிறுவனமாக ஒரு வலுவான நிறுவன நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது. வணிகத்தை அதன் உண்மையான திறனை அடைவதற்கான எங்கள் நோக்கத்தைத் தொடர இது உதவுவும். சிங்கர் ஸ்ரீ லங்கா மற்றும் குழு என்பன இந்த மூலோபாயத்தை அடைவதில் உறுதியாக உள்ளன, அதற்கான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கவுள்ளன. இந்த குழு அடுத்த ஆண்டுகளில் பலத்தின் ஆதாரமாக தொடரும். மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், சிங்கர் ஃபைனான்ஸ் கடன் மூலதனத்தை சுயாதீனமாக உயர்த்துவதிலும், நிலையான வைப்புகளை ஆக்கிரமிப்பாக திரட்டுவதிலும் உறுதியான முன்னேற்றத்தை அடைந்தது.

 

எங்கள் மக்கள் முன்மொழிவு

ஒரு சேவை அமைப்பாக நாங்கள் எங்கள் மக்களை விருத்தி செய்ய கணிசமான முக்கியத்துவம் அளிக்கிறோம் – அவர்களே எமது மிகவும் பெறுமதி மிக்க சொத்தாக அமைந்துள்ளனர். நாங்கள் வழங்கும் சேவையின் தரம் உண்மையிலேயே ஊழியர்களின் தரத்தின் பிரதிநிதி என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வருடத்தில், நிறுவனத்திற்குள் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய குழு கலாச்சாரத்தை உருவாக்க திறனை வளர்ப்பது, இயலுமைகளை விருத்தி செய்வது மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம்

 

வாடிக்கையாளர் தொடர்பு முகாமைத்துவம்

சிங்கர் ஸ்ரீ லங்கா தொடர்ச்சியாக 13 வது ஆண்டாக ஆண்டின் சிறந்த மக்கள் வர்த்தக நாமம் என்ற விருதை வென்றது, இது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை தரங்களுக்கான அதன் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும். குழுவின் புதிய மூலோபாய உத்தரவுகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவத்தில் இன்னும் அதிகமான KPI களை அடைய குழு தீர்மானித்துள்ளது. சிங்கர் ஃபைனான்ஸ், குழுவின் முக்கிய துணை நிறுவனமாக இருப்பதால், வாடிக்கையாளர் மையப்படுத்தலுக்கும் அதே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, இதனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சமூகத்திற்கும் எங்கள் கூட்டுப் பொறுப்பு குறித்த குழு அளவிலான விழிப்புணர்வை உறுதி செய்கிறது.

 

முன்னோக்கிய பாதை

அடுத்த ஆண்டிற்கான குழுவின் மூலோபாய மைய புள்ளிகளில் ஒன்றாக திறனற்ற செலவுகளை முக்கியத்துவம் மிக்க இடங்களில் இருந்து அகற்றுவதில் பணியாற்றுவது காணப்படுகின்றது. இது சிறந்த வருமானத்தை ஈட்டக்கூடிய செயல்பாடுகள் மற்றும் இயக்கங்களில் இந்த சேமிப்புகளை முதலீடு செய்ய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இயக்க நிலப்பரப்பின் விரைவான முன்னேற்றங்களை நாங்கள் அறிவோம், இது இந்த சந்தை மேம்பாடுகளுக்கு எங்கள் பெறுமதி முன்மொழிவை முன் யோசனை மூலமாக மாற்றியமைக்க தூண்டுகிறது. இந்த விரைவான முன்னேற்றங்களைத் தொடர தொழில்நுட்பம் ஒரு முக்கிய உதவியாளராக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் சேவை அளவுருக்களை மேம்படுத்த ஆன்லைன் கடன் மதிப்பீடுகள், டிஜிட்டல்மயமாக்கல் செயல்பாடுகளை அறிமுகப்படுத்த நம்புகிறோம். மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் சமூக ஊடகங்களில் எங்கள் இருப்பை மேம்படுத்தியுள்ளோம், இதன் மூலம் டிஜிட்டல் முறைமைகள் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர் பிரிவுகளுடன் தீவிரமாக ஈடுபடுகிறோம்.

எங்கள் கிளை வலையமைப்பின் மூலோபாய விரிவாக்கத்தின் மூலம் சிங்கர் ஃபைனான்ஸ் அதன் புவியியல் தடம் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இயக்குநர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது, இதன் மூலம் எங்கள் தங்கக் கடன் இலாகாவை விரிவுபடுத்த முடியும்.

 

பாராட்டுக்கள்

சிங்கர் ஃபைனான்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவத்தின் தலைமையில் அணியினர் வழங்கிய பங்களிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன். அவர்களின் கடப்பாடு மற்றும் பங்களிப்பு என்பவற்றின் மூலமே எம்மால் சிறந்த நிதியியல் மற்றும் இயக்க செயற்பாடுகளை அறிக்கையிட முடிந்துள்ளது.

தவிசாளர் திரு. அரவிந்த பெரேரா மற்றும் பணிப்பாளர் சபைக்கு அவர்கள் வழங்கிய மூலோபாயப் பங்களிப்புகள் மற்றும் களைப்பற்ற முயற்சிகளுக்காக விசேட நன்றிகள் உரித்தாகின்றன. குழுவின் தவிசாளர் திரு. மோகன் பண்டிதகே மற்றும் குழுவின் இணைத் தவிசாளர் திரு. தம்மிக பெரேரா ஆகியோர் கம்பெனியின் நீண்ட கால மூலோபாயம் தொடர்பில் வழங்கிய வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

15 வருடங்கள் என்ற முக்கியத்துவம் மிக்க மைல்கல்லை கம்பெனி பூர்த்தி செய்யும் நிலையில் கம்பெனியின் ஓய்வு பெற்ற பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. R.S. விஜேவீர அவர்கள் கம்பெனி தொடங்கிய நாள்முதல் வழங்கிய 14 வருட கால களைப்பற்ற சேவைக்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன் கம்பெனியின் பணிப்பாளர் / குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடாமியற்றிய திரு. அசோக பீரிஸ் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது வாடிக்கையாளர்கள், வழங்குனர்கள் மற்றும் வியாபாரப் பங்காளர்கள் உள்ளடங்கலாக எமது பங்குதாரர்கள் அனைவரும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை இங்கு நான் பதிவு செய்கின்றேன். மத்திய வங்கியின் ஆளுநர், மத்திய வங்கியின் வங்கியற்ற நிறுவனங்களின் மேற்பார்வை பணிப்பாளர் மற்றும் அவரது அதிகாரிகள், பரிமாற்றங்களின் கட்டுப்பாட்டாளர் அத்துடன் கடன் தகவல் பணிமனையின் பொது முகாமையாளர் மற்றும் ஆளணி ஆகியோர் வழங்கிய வழிகாட்டல் மற்றும் ஆதரவு என்பவற்றுக்காக அவர்களுக்கு எமது நன்றியை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

 

மகேஷ் விஜேசுந்தர
பிரதம நிறைவேற்று அதிகாரி

சிங்கர் ஃபைனான்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு

சிங்கர் ஃபைனான்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு

“வரிகளுக்கு பின் கம்பெனியின் நிகர இலாபம் 22% இனால், 542 மில்லியன் ரூபாய்கள் வரை வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.”

பிரதம நிறைவேற்று அதிகாரியாக எனது முதல் ஆண்டில் உங்கள் நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் எதிர்கால பார்வை குறித்த எனது உணர்வுகளை நான் வெளிப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சியையும் கௌரவத்தையும் வழங்குகின்றது. சந்தையில் நிதி தீர்வுகளை வழங்கிய 15 வெற்றிகரமான ஆண்டுகளை நிறுவனம் கொண்டாடுவதால் 2019 ஒரு மைல்கல் ஆண்டாகும். சிங்கர் ஃபைனான்ஸ் சீராகவும், வலிமையாகவும் வளர்ந்துள்ளது, இன்று தொழில்துறையில் அங்கீகரிக்கப்பட்ட இயங்குநராக உள்ள எமது நிறுவனத்தின் மொத்த சொத்து அடிப்படை கிட்டத்தட்ட ரூ. 20 பில்லியன்களாக உள்ளது. நெறிமுறை வணிக மதிப்புகள் மற்றும் கார்ப்பரேட் கவர்னன்ஸ் நடைமுறைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் சமரசமற்ற அர்ப்பணிப்பின் மூலம், நாங்கள் மிகவும் மதிப்பிற்குரிய நிதி நிறுவனமாக தொழிற் துறையில் எங்கள் தொழில் மீதான நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் பெற்றுள்ளோம்.

பொருளாதார மற்றும் தொழில்துறை மீதான மீளாய்வு

இலங்கையின் பொருளாதாரம் 2018 ஆம் ஆண்டு எதிர்வு கூறப்பட்டதையும் விட மந்தமான 3.2 சதவீதம் என்ற பொருளாதார வளர்ச்சியைக் காண்பித்தது. விவசாய நடவடிக்கைகளில் ஒரு மீட்சி காணப்பட்டாலும், தொழில்துறை துறையில் ஒரு சுருக்கம் முதன்மையாக கட்டுமான நடவடிக்கைகளின் வீழ்ச்சியிலிருந்து உருவானது வளர்ச்சி மந்தநிலை அடைவதற்கு வழிவகுத்தது.

மதிப்பு விகிதங்களுக்கு (LTV) கடனுக்கான கடுமையான வழிகாட்டுதல்களின் மூலம் கட்டுப்பாட்டாளர் விதித்த கடன் சுருக்க நடவடிக்கைகள் வணிக வளர்ச்சிக்கு உதவாது என்பது ஒரு பரந்த கண்ணோட்டத்தில் இந்த வழிகாட்டுதல்கள் கடன் தரத்தை நிலைநிறுத்துவதில் நன்மை பயக்கும், இந்த வழிகாட்டுதல்கள் ஒரு பரந்த கண்ணோட்டத்தில், கடன் தரத்தை நிலைநிறுத்துவதில் பயனளித்தன. ஒட்டுமொத்தமாக இலங்கை மத்திய வாங்கி தொழில் துறையில் ஒழுங்குக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவதில் கவனம் செலுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் நிச்சயமாக நிதியியல் சேவைகள் துறையின் மிகவும் திடமான தோற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதால் சரியான பாதையில் முன்னெடுக்கப்படும் இந்தப் படிநிலைகளை நான் வரவேற்கின்றேன்.

இந்த நிலைமைக்கு மத்தியில், 2018/19 ஆண்டு பெரும்பாலான தொழில்களுக்கு கடினமான ஆண்டாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டின் முக்கிய பாகங்களில் கிடைக்கப்பெற்ற போதிய மழைவீழ்ச்சி காரணமாக விவசாயத்துறை செழிப்பு மிக்கதாக இருந்தது. நாம் எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியில் இந்நிலை ஒரு சிறந்த விடயமாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், முந்தைய ஆண்டுகளில் வறட்சி அல்லது வெள்ளம் ஏற்பட்டதால், இந்த சிறந்த அறுவடை மூலம் பெறப்பட்ட நன்மைகளை விவசாயத்துறையினால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இந்நிலை காரணமாக உழைப்பின் ஒரு பகுதி பழைய கடன்களை தீர்ப்பதற்கு செலவாகியது.

கம்பெனியின் செயற்பாடு

வரிகளுக்கு பின் கம்பெனியின் நிகர இலாபம் 22% இனால், 542 மில்லியன் ரூபாய்கள் வரை வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். இது ஒரு மைல்கல்லாகும். வட்டி வருமானத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி 26.7% அதிகரித்து ரூ. 3.8 பில்லியன் ஆகவும், கட்டணம் மற்றும் கமிஷன் வருமானம் 34% அதிகரித்து ரூ. 237 மில்லியனாக காணப்பட்டமை என்பன நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு காரணிகளாக இருந்தன. மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டை பொருளாதாரத்திற்கு வெளிப்புற ஆதரவின் அடிப்படையில் ஒரு சிறந்த ஆண்டு என்று சொல்ல முடியாது. உயரும் வட்டி மற்றும் கடன் மீட்பு வரி விதித்தல் போன்ற காரணிகள் வளர்ச்சியைத் தடுக்கும் நேரடி மாறிகளாகக் காணப்பட்டன. குறைபாட்டுக் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகள் 58.7% அதிகரித்து ரூ. 282 மில்லிங்களாக ஆகியமை காரணமாக கடுமையான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களின் பணப்புழக்க நிலைகள் பின்வாங்கத் தொடங்கியதால் முக்கியமாக வெளிப்புற இயக்க சூழலுக்கு காரணமாக இருந்தது.

ஆண்டின் மீதின் ஆண்டு என்ற அடிப்படையில் வட்டி செலவில் YOY 27.8% அதிகரித்து ரூ. 1.6 பில்லனாகக் காணப்பட்டமைக்கு விகிதங்களின் அதிகரிப்பு மற்றும் கடன் வாங்கிய குவாண்டம் ஆகிய இரண்டும் காரணமாக அமைந்திருந்தது. பின்னரான விடயத்தின் வளர்ச்சியானது கிளை விரிவாக்கம் மற்றும் மென்பொருள் உருவாக்கம் என்பவற்றை தவிர்த்து முழுக்க முழுக்க அடிப்படை வியாபாரமான கடன் வழங்கலால் ஏற்பட்டதாகவே அமைந்துள்ளது. ஆட்கள் தொடர்பில் வெளித்தெரியும் 31% செலவீன வளர்ச்சியான ரூ. 480 மில்லியன் ஆளணியின் எண்ணிக்கை 129 இல் இருந்து 518 ஆக அதிகரிக்கப்பட்டமையினால் ஏற்பட்டது. 80% ஆன புதிய பணியாளர்கள் நேரடியான வருமானமீட்டல் செயற்பாடுகள் மற்றும் கிளை விரிவாக்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக உள்வாங்ககப்பட்டனர். நிருவாக மற்றும் விற்பனை செலவு அதிகரிப்பு 29% ஆன ரூ. 698 மில்லியன் ஆகக் காணப்பட்டது. இம்மேளத்திகச் செலவுகள் வியாபார நடவடிக்கை விரிவாக்கம் மற்றும் தங்கக் கடன் சேவை உருவாக்கம் என்பவற்றால் ஏற்பட்டன. மொத்த செலவுகள் பட்ஜெட் அளவிற்குக் குறைவாக இருப்பதை நிர்வாகம் உறுதிசெய்தது மற்றும் பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றியது, அவை நல்ல நிதி முடிவுகளை அடைவதற்கு முக்கிய பங்களிப்பு காரணிகளாக இருந்தன.

சிங்கர் ஃபைனான்ஸ் ஹொரன, கம்பளை மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் புதிய கிளைகளை ஆரம்பித்ததுடன் குருநாகலையில் இரண்டாவது கிளையொன்றும் திறக்கப்பட்டது. எமது மாத்தறைக் கிளை தெற்குப் பிராந்தியத்தின் மையப் பகுதியொன்றுக்கு மிகவும் வெளித்தெரியும் மற்றும் இடவசதி மிக்க இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. மிகவும் இயங்குநிலை கொண்ட வளர்ச்சித்திட்டங்களை கருத்திற் கொண்டு எமது தாய்க் கம்பெனியின் நுகர்வோர் பொருட்கள் விற்கும் பாணந்துறை, வெள்ளவத்தை மற்றும் வவுனியா கிளைகளில் காணப்பட்ட சேவை நிலையங்கள் இடவசதி, வெளித்தெரியும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வசதி மிக்க இடங்களுக்கு மாற்றப்பட்டன. இச்சேவை நிலையங்களுக்கு கிளை அந்தஸ்தினை வழங்குமாறு நாம் மத்திய வங்கிக்கு விண்ணப்பம் செய்துள்ளோம். மேற்குறிப்பிடப்பட்ட எட்டு புதிய இடங்களும் உயர்த்தப்பட்ட இயக்க இயலுமைகள், உயர்த்தப்பட்ட சேவை நியமங்களுடன் வெளித்தெரியும் வியாபார நாமத்துடன் வியாபாரத்தை அதிக அளவில் விரிவாக்கவுள்ளன. எமது தங்கக் கடன் சேவையினை நாம் 14 இடங்களுக்கு விரிவாகியுள்ளோம் அத்துடன் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் ஆண்டில் தங்கக் கடன் சேவை மேம்பாட்டில் ஒன்று கூட்டப்பட்ட அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடு காரணமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது என்பதை நான் மகிழ்வுடன் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த புதிய சேவை செயற்படுத்தப்படும் வேகம் மற்றும் எட்டப்பட்ட வளர்ச்சி குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். மிக விரைவில் தங்கக் கடன் சேவை எமது வியாபாரத்தில் லீசிங் செயற்பாட்டுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை விரைவில் எட்டிப்பிடிக்கவுள்ளது. 2018 ஆம் ஆண்டில் சிங்கர் ஃபைனான்ஸ் இனது செயற்படாத சொத்துக்களின் விகிதம் 3.10% ஆகக் காணப்படுகின்றது, இது 7.7% என்ற துறையின் அவ்விகிதத்தை விடக் குறைவானதாகும்.

பணியாற்றுவதற்கு மிகச் சிறந்த இடம் – எமது பணியாளர்களின் நோக்கு

மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் ஆண்டில் உங்களின் நிறுவனம் “இலங்கையில் பணியாற்றுவதற்கு மிகச்சிறந்த இடம்” ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டதை அறியத்தருவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட 25 கம்பனிகளின் குழுவில் நாமும் அங்கம் வகிக்கின்றோம். இச்சான்றிதழ் பெறப்பட்டமை பணியாளர்கள் நியாயமாக நடத்தப்படும் உள்வாங்கும் கலாச்சாரம் ஒன்றை கம்பெனி கொண்டிருப்பதையும் நாம் அனைவரும் மகிழ்ச்சி மிக்க பணிபுரியும் சூழல் ஒன்று காணப்படுவதை பிரதிபலிக்கின்றது. ஊக்கமளிக்கும் இரண்டு பெற்றோர் அமைப்புகளின் வளமான பாரம்பரியத்திலிருந்து நம்மைத் தொடர்ந்து கொண்டுவரும் திடமான கலாச்சார பிரதிபலிப்புகளுக்கு நாங்கள் ஊக்கமளிக்கும் இரண்டு தாய் நிறுவங்களுக்கும் நன்றி கூறுகிறோம், அதாவது சிங்கர் (இலங்கை) பி.எல்.சி மற்றும் ஹேலீஸ் பி.எல்.சி என்பனவே அவையாகும். இந்த வலுவான உறவிலிருந்து உருவாகும் நேர்மறையான உணர்வுகள், இந்த அங்கீகாரத்தை அடைவதற்கு பங்களிப்பு காரணிகளாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை.

“பணி புரிவதற்கு சிறந்த இடமாக” அங்கீகாரம் பெறுவதற்கு அதீத முயற்சி அவசியமானதாகும், ஏனெனில் சிறந்த நிறுவனங்கள் உயர் அளவில் அறிவியல் ரீதியாக வழிகாட்டப்பட்ட முறையொன்றின் மூலமே தெரிவு செய்யப்பட்டன. கொம்பனியின் ஒட்டுமொத்த பணியாளர்களிடமும் நம்பகத்தன்மை, கௌரவம், நியாயம், பெருமை மற்றும் பரஸ்பர பணியாளர்கள் இடையே காணப்படும் ஒற்றுமை போன்ற விடயங்கள் அடங்கிய வினாக்கொத்து மூலமான தகவல் சேகரிப்பு இதற்காக மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தக நாம அடையாளம்

இவ்வருடத்தில் சிங்கர் ஃபைனான்ஸ் இனால் வர்த்தக நாம மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நுட்பமான, ஆனால் நவீன மாற்றங்களுடன், எங்கள் புதிய கார்ப்பரேட் அடையாளத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய கிளை இருப்பிடங்களின் அனைத்து முகப்புகள் மற்றும் தோற்றங்களுடன் பிராண்ட் பெயருக்கு மிகவும் துடிப்பான மற்றும் வண்ணமயமான வவர்த்தக நாம அடையாளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய அடையாளம் நிறுவனத்தின் தற்போதைய இருப்பிடங்களுக்கு கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த ஆண்டில் நிறுவனம் கொழும்பு 3 இல் ஒரு மூலோபாய மற்றும் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரத்யேக தலைமை அலுவலகத்திற்கு இடம் பெயர்ந்தது. இது சிங்கர் ஃபைனான்ஸ் பிராண்டிற்கு அதிகத் தெரிவுநிலையை உருவாக்கும் – நிதிச் சேவைத் துறையில் எங்கள் இருப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நிறுவனம் அச்சு, சமூக ஊடகங்கள், வானொலி மற்றும் வரி விளம்பர ஊடகங்களுக்குக் கீழே தனது பிராண்ட் இருப்பை அதிகரித்துள்ளது, மேலும் சிங்கர் ஃபைனான்ஸிற்கான வலுவான மற்றும் சுயாதீனமான கிளை அடையாளத்தை தொடர்ந்து உருவாக்கப்படவுள்ளது. ஒரு சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை நிர்வாகம் அயராது வலியுறுத்தியது மற்றும் ஈர்க்கிறது, இது போட்டியில் இருந்து நம்மை வேறுபடுத்தக்கூடிய ஒரு மாறி என்று நாங்கள் நம்புகிறோம். வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் உறவு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் குழுவின் கவனம் உள்ளது என்பதையும் நிறுவனம் அறிந்திருக்கிறது.

எதிர்கால வெளி நோக்கு

கிளை வலையமைப்பில் துரித வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் குத்தகை மற்றும் தங்கக் கடன்களின் முக்கிய வணிகத்தில், அதன் உண்மையான திறனை எட்டும் நோக்கத்துடன் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து நிறுவனம் கவனம் செலுத்தும். ‘அவசர உணர்வோடு’ இந்த வளர்ச்சியை அடைவதில், மேலாண்மை வெளிப்புற ஆபத்து காரணிகளை கவனத்தில் கொண்டிருக்கும், மேலும் பொருளாதார காரணிகள் நினைத்தபடி நகராவிட்டால், அதே ‘அவசர உணர்வோடு’ மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்து கொள்ளலாம். புதிய சந்தைகளில் நுழைவதற்கும், கிளை மற்றும் சந்தைப்படுத்தல் ஊழியர்களின் விரிவாக்கம் மூலம் புதிய வணிக வசதிகளை உருவாக்குவதற்கும் கூடுதலாக, நியாயமான விகிதாச்சாரத்தில், பாதுகாப்பான குத்தகை வசதிகளின் சராசரி கடன் அளவு அதிகரிப்பதில் கவனம் செலுத்துவோம். இந்த அணுகுமுறை, கமபனியின் அபாய நேரிடர் எதிர்கொள்வதில் உள்ள விருப்பு மற்றும் நேர்மறையற்ற வெளியக சூழலில் சரியானது என நான் நம்புகின்றேன்.

ஒரு சிறந்த சேவையை வழங்குவதன் மூலமும் சிங்கர் ஃபைனான்ஸ் எங்கள் திறமையான ஊழியர்களின் திறன்கள் மற்றும் திறன்களைப் பயன்படுத்தியும் பெறக்கூடிய பல வாய்ப்புகள் சந்தையில் உள்ளன. எங்கள் ஊழியர்களின் திறன்களில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடந்த காலத்தில் நிறுவனம் நிலையான வைப்புகளில் போட்டி விகிதங்களை வழங்க தயங்கியது, அதற்கு பதிலாக மற்ற ஆதாரங்கள் மூலம் கடனை திரட்ட ஆர்வமாக இருந்தது. நிறுவனத்தின் புதிய உத்திகளுக்கு ஏற்ப, சிங்கர் ஃபைனான்ஸ் இப்போது நிலையான வைப்பு வணிகத்தில் ஒரு போட்டி மிக்க மாறியுள்ளதுடன், இந்த பிரிவை வளர்ப்பதற்கான விரிவான திட்டங்களையும் கொண்டுள்ளது என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நிதி நிறுவனத்திற்கான முக்கிய மற்றும் பிரதான நிதி மூலோபாயமாக, பரந்த அடிப்படை நிலையான வைப்பு திரட்டல் அமைந்துள்ளது என்று நான் நம்புகிறேன்.

எமது உறுதியானஅடித்தளத்தில் இருந்து கட்டியெழுப்புதல்

சிங்கர் ஃபைனான்ஸ் நெறிமுறைகள் மற்றும் குழும ஆட்சி ஆகியவற்றில் மிகவும் வலுவான அடித்தளத்துடன் செயல்படுகிறது. இந்த மதிப்பீடுகளையும் கொள்கைகளையும் பராமரிப்பதற்கான மரபுகளை இறுதியில் முன்னெடுத்துச் செல்லும் ஊழியர்கள் தான் எமது ஊழியர்கள் என்று நாங்கள் நம்புவதால், எங்கள் ஆட்சேர்ப்பு தேர்வில் இதைப் பிரதிபலிக்க நிறுவனம் நிறைய முயற்சிகள் செய்கிறது. எங்கள் அனைத்து ஊழியர்களிடமிருந்தும் சிறந்த நடத்தை தவிர வேறொன்றையும் நாங்கள் கோரவில்லை.

எங்கள் அடித்தளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன, எங்கள் மூலதனம் மற்றும் பணப்புழக்க நிலைகள் வலுவானவை, ஒருங்கிணைந்த இடர் மேலாண்மைக் குழு மற்றும் கடன் குழுவின் வடிவத்தில் மிகவும் ஆர்வமுள்ள மற்றும் அனுபவம் வாய்ந்த குழுவினால் எங்கள் அபாய நேரிடர் மீதான விருப்பு நன்கு கண்காணிக்கப்படுகிறது. இதுபோன்ற நிலையிலும், நாங்கள் திருப்தியுடன் இருக்க மாட்டோம், மேலும் வெளி மற்றும் உள் வணிகச் சூழலுக்கு ஏற்ப எங்கள் இடர் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

பேண்தகு தன்மை மற்றும் குழுமத்தின் சமூக பொறுப்பாண்மை

நிறுவனமும் ஊழியர்களும் ஒரு பேண்தகு நிலையான வணிகச் சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளனர். ஒரு வேலைவாய்ப்பு உருவாக்குனராக நாம் பூர்த்திசெய்யும் மற்றும் பேண்தகு நிலையான வேலைகளை நிறுவ முயற்சிக்கிறோம். ஒரு ஊழியர் எங்களுடன் சேரும்போது, அவர் தனது திறனின் முழுமையை அடையும் வரை அவர் அல்லது அவள் வழிகாட்டப்பட்டு வளர்ந்திருப்பதை உறுதிசெய்கிறோம். வழிகாட்டுதல் செயல்பாட்டில் வாடிக்கையாளர்கள் மற்றும் பரந்த பங்குதாரர்களுடன் மிக உயர்ந்த நெறிமுறை தரங்களுடன் தொடர்புகொள்வதன் முக்கியத்துவம் குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளன. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான நிதி முன்மொழிவுகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும் நாங்கள் முயற்சி செய்கிறோம், இது ஒரு நிலையான நிறுவனத்தை உருவாக்குவதற்கான முதல் செயல்களில் ஒன்றாகும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களை நாங்கள் கவனிக்கும் அதே வேளையில், எங்களது உதவி தேவைப்படும் ஒரு உலகம் உள்ளது. ஒரு அமைப்பாக நாங்கள் எப்போதுமே உறுதியுடன் இருக்கிறோம், நமது திறனுக்கு சமூகத்திற்கு உதவ வேண்டியதன் அவசியத்தை அறிந்துகொள்கிறோம், மேலும் அந்த ஆண்டில் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கம் சமூக மற்றும் உறவு மூலதனத்தின் கீழ் 80 முதல் 89 பக்கங்களில் பிரதிபலிக்கிறது.

பாராட்டுக்கள்

தலைமை நிர்வாகியாக எனது முதல் ஆண்டில் இந்த மாபெரும் அமைப்புக்கு தலைமை வழங்குவது ஒரு பாக்கியமாகும்; வருடத்தில் நாம் அடைந்ததை அடைய பலரின் ஒருங்கிணைந்த திறமையும் அர்ப்பணிப்பும் அவசியமாகும். தவிசாளர் திரு. அரவிந்த பெரேரா மற்றும் இயக்குநர்கள் குழு அவர்களின் மூலோபாய பார்வை மற்றும் மேற்பார்வைக்கு நான் நன்றி கூறுகிறேன். குழுமத் தவிசாளர் திரு. மோகன் பண்டிதகே, குழும இணைத் தவிசாளர் திரு. தம்மிகா பெரேரா மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி திரு. மகேஷ் விஜேவர்தன அவர்களின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஊக்கம் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒரு ஈர்க்கப்பட்ட மற்றும் திறமையான குழு பல முனைகளில் வழங்க கடினமாக மற்றும் அவசர உணர்வோடு உழைத்தது, விரைவான வளர்ச்சியை வழங்குவதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர், மேலும் மூத்த நிர்வாகக் குழுவின் தோல்வியற்ற நட்புறவு மற்றும் அமைப்பின் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாகவும் பாராட்டுகிறேன்.

மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டின் போது, நிறுவனத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆர்.எஸ். விஜீவீரா நீண்ட மற்றும் சிறப்பான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார். அவர் வழங்கிய வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும், நிறுவனத்திற்கு அவர் செய்த நீண்ட சேவைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவரது ஆட்சிக் காலத்தில் நிறுவனம் சீராக வளர்ந்து பல அடையாளங்களை அடைந்தது. திரு விஜேவீரா ஒரு அற்புதமான ஓய்வுகாலத்தை
கழிக்க வாழ்த்த விரும்புகிறோம். எங்கள் உண்மையான பாராட்டு, முன்னாள் குழு தலைமை நிர்வாக அதிகாரி திரு. அசோகா பீரிஸ் அவர்களுக்கும் உருத்தாகின்றது, சிங்கர் நிதி வாரியத்தில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய அவர், நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக உழைத்தவராகும்.

மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை மத்திய வங்கியின் வங்கி சாரா மேற்பார்வை மற்றும் அவரது அதிகாரிகள், பரிவர்த்தனை கட்டுப்பாட்டாளர் மற்றும் ஜெனரல், கடன் தகவல் பணியகத்தின் மேலாளர் மற்றும் பணியாளர்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் எங்கள் பாராட்டுக்களை பதிவு செய்ய இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன். எங்கள் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் வணிக கூட்டாளர்களை அவர்களின் மதிப்புமிக்க ஆதரவு மற்றும் பங்களிப்புக்காக அங்கீகரிக்கவும், அடுத்த ஆண்டுகளில் சிங்கர் நிதி பயணத்தில் அவர்கள் தொடர்ந்து பங்காளிகளாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.

துஷான் அமரசூரிய
பிரதம நிறைவேற்று அதிகாரி